வெங்கடபுரம் எனும் சிறு கிராமத்தில் இந்த வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்ஸ்தலத்தின் ஐதீகக்கதைகளின்படி வெங்கடேஸ்வர பஹவான் திருப்பதி வந்து தன்னை தரிசிக்க முடியாமல் வாடிய ஒரு தீவிர பக்தனுக்கு பசுஞ்சாணத்தில் இருந்த ஒரு கல்லில் காட்சியளித்து அருள் புரிந்ததாக சொல்லப்படுகிறது. கடக்’கிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு அமைதியையும் வெங்கடேஸ்வர பஹவானின் ஆசியையும் வேண்டி பயணிகள் செல்லலாம்.