கிர் தேசிய பூங்காவை இணைக்கும் நிலத்தை 2004-ஆம் ஆண்டு மிட்டியாலா வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 18.22 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் சில நேரம் சிங்கங்களும் சிறுத்தை புலிகளும் தங்கள் பொழுதை கழிப்பதை காண நேரிடலாம்.
மான் போன்ற மற்ற அருகிவரும் உயிரினங்களையும் இங்கே காணலாம். வனவிலங்கு வாழ்க்கையை பற்றியும் இயற்கையை பற்றியும் கற்றுக்கொள்ள இது மிக சிறந்த இடமாக விளங்குகிறது. எப்போது பார்த்தாலும் சிங்கங்கள் அல்லது சிறுத்தை புலிகள் உங்கள் வண்டியை கடந்து செல்வதை காணலாம்.