மணிப்பூர் மாநில அருங்காட்சியகம் மணிப்பூரின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டாக ஏற்படுததப்பட்ட இடமாகும். இந்தியாவின் முன்னாள் பிரதமரான மறைந்த திரு.
இந்திரா காந்தி அம்மையாரால் 1969-ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட மணிப்பூர் மாநில அரசு அருங்காட்சியததில் தொல்லியல், மானிட உறவியல், இயற்கை வரலாறு, ஜல்லன் மற்றும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
காங்லாவின் போலோ மைதானங்களுக்கு அருகில் உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் போது, ஒரே நாளில் இந்த இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்து விட முடியும்.
ஹியாங் ஹிரென் (அரசரின் படகு) என்ற 78 அடி நீளமுள்ள படகு இங்குள்ள திறந்தவெளி காட்சியத்தில் வைக்கப் பட்டிருப்பது தான் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பாகும். இந்த மியூசியத்தில் இருக்கும் பிற காட்சி சாலைகள் வேறு வேறு பொருட்களைப் பற்றிய செய்திகளை அளிப்பவையாக உள்ளன.
மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்தில் கலாச்சாரம், உயிரியல் மற்றும் அருங்காட்சிய விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
நடமாடும் கண்காட்சிகள் மற்றும் அறிவியல் கண்காட்சிகளும் இந்த அருங்காட்சியகத்தால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அருங்காட்சியகம் திங்கள் முதல் சனிக்கிழமைகளில் (விடுமுறை நாட்கள் தவிர) கால 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



Click it and Unblock the Notifications