ஜம்முவின் முற்கால மன்னர்கள் மகாராஜா ரன்பீர் சிங் மற்றும் அவரது தந்தை மகாராஜா குலாப் சிங் ஆகியோரால் கட்டப்பட்ட ரகுநாத் கோவில்; இப்பிராந்தியத்தின் பிரதம சிறப்புகளில் ஒன்று.
கோவில் கட்டுமானம் 1851ம் ஆண்டு தொடங்கி 1857 இல் முடிவுக்கு வந்தது. இந்த புனித யாத்திரை தளம் ரன்பிரேஷ்வர் கோவில் மற்றும் பஞ்சாபக்தர் கோயில்கள் இணைந்து உள்ள ஒரு கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
ஏழு வரலாற்று சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்கள் ரகுநாத் கோவில் அமைந்துள்ள இடத்தில் உள்ளன. இந்த கோவிலின் பிரதம தெய்வங்கள் இந்து மத கடவுள்களின் பல்வேறு உருவகங்களான சூரிய கடவுளான சூர்யா, இந்து மத அழித்தல் கடவுள் சிவன், இந்து மத பாதுகாப்பு கடவுள் விஷ்ணு ஆகியன.
ரகு நாதர் கோவிலின் மாடங்கள், வளைவுகள், முகப்புகள் முகலாய கட்டிட கலை பாணியை பிரதிபலிக்கின்றன. இந்து குரங்கு கடவுளான அனுமானின் சிலை மற்றும் ரன்பீர் மகாராஜாவின் உருவ படங்களும் கோவில் நுழைவு பகுதியில் காணப்படுகின்றன. ரகு நாதர் ஆலயத்தின் தங்க முலாம் பூசப்பட்ட உட்பகுதிகள் பிரம்மிக்கவைக்கின்றன.
ரகு நாத் கோவிலில் பல்வேரு இந்து கடவுள்களின் சிலைகளும் , பெண் கடவுள்களின் பல பெரிய சிலைகளுக்குமான கருவறை காணப்படுகிறது. மேலும் சிவனின் அடையாளமான ‘லிங்கங்கள்’ இங்கு காணப்படுகின்றன.
நன்றாக உற்றுபார்த்தால் கோவில் சுவர்களில் புனித கல்வெட்டுகள் இருப்பதை காணமுடியும். பண்டைய நூல்கள் மற்றும் கையெழுத்து போன்ற அரிய சேகரிப்புகளை கொண்டுள்ள ஒரு சமஸ்கிருத நூலகம் கோவில் வளாகத்தின் உள்ளே உள்ளது இந்த கோவில், எனவே லட்சக்கணக்கான பக்தர்களை மட்டுமல்லாது வரலாற்று ஆர்வலர்களையும் ஈர்க்கிறது.