சாஸ்தாம்கொட்டா ஏரி எனும் இந்த பிரம்மாண்ட நன்னீர் ஏரியானது தன் இயற்கை எழில் மற்றும் படகுவீடு வசதிகள் போன்றவற்றுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ஏரியின் கரையில் அமைந்துள்ள பிரசித்தமான சாஸ்தா கோயிலின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. மீன் வளர்ப்புக்கும், கொல்லம் பிரதேசத்தின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த ஏரி பயன்படுகிறது.
கேரளாவிலுள்ள பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான இந்த சாஸ்தாம்கொட்டா ஏரியானது 2002ம் ஆண்டு நடைபெற்ற ராம்சார் மாநாட்டுக்கு பிறகு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்திலுள்ள இந்த ஏரியை சாலை மார்க்கமாக அல்லது ஃபெர்ரி (சொகுசு மோட்டார் படகு) மூலமாக வந்தடையலாம்.
இந்தப்பிரதேசத்தின் மண் வளத்துக்கும், விவசாயப்பாசனத்துக்கும் பிரதான ஆதாரமாக சாஸ்தாம்கொட்டா ஏரி திகழ்கிறது. ஏரியைச்சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காட்சியளிப்பதால் எழில் நிறைந்த ஒரு அற்புத சிற்றுலாத்தலமாக இந்த ஏரிப்பகுதி பிரசித்தி பெற்றுள்ளது.