அருவிக்கரா எனும் இந்த அழகிய கிராமம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த கிராமத்தின் வழியாக கரமனா எனும் ஆறு ஓடுகிறது.
ஒரு அணைத்தேக்கம் மற்றும் தோட்டப்பூங்காவுக்காக இக்கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது. அன்புக்குரியவர்களுடன் ஏகாந்தமாக கழிப்பதற்காக இங்கு உள்ளூர் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் கூடுகின்றனர்.
இங்குள்ள பகவதி கோயிலை வழிபடுவதற்காக துர்க்கை அம்மன் பக்தர்களும் இங்கு வருகை தருகின்றனர். இந்தக் கோயிலின் வாசலிலேயே ஒரு சிறு ஓடையும் ஓடுவது மற்றொரு விசேஷம். தெய்வீக அம்சம் தவழும் இக்கோயிலுக்கு வருகை தரும் பயணிகள் இங்கு நடத்தப்படும் மாலை நேர பூஜைகளிலும் கலந்துகொள்கின்றனர்.
இக்கிராமத்தில் கரமனா ஆற்றில் கட்டப்பட்டுள்ள சிறு அணைத்தேக்கத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களின் தேவைக்கான நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
சந்தடியற்ற கிராமப்புற அமைதியை ரசிக்க விரும்பும் பயணிகள் இந்த அருவிக்கரா கிராமத்துக்கு விஜயம் செய்வது அவசியம்.



Click it and Unblock the Notifications