சமுத்ரா பீச் எனும் கடற்கரைப்பகுதி கோவளத்திலுள்ள மூன்று முக்கியமான கடற்கரைகளுள் ஒன்றாகும். கோவளத்தின் வடகோடியில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு மற்ற இரண்டிற்கு வருவதுபோல் அதிகம் பயணிகள் வருவதில்லை.
வடபகுதியிலுள்ள கடற்கரைக்கும் தென் பகுதியிலுள்ள கடற்கரைக்கும் இடையே ஒரு பெரும் பிளவு காணப்படுவதும் இதற்கு முக்கிய காரணமாகும். அதிக சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் இல்லாததால் உள்ளூர் மீனவர்கள் இந்த கடறகரையை தங்கள் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் சாகசமான சுற்றுலா அனுபவங்களை விரும்பும் பயணிகள் இப்பகுதிக்கு விஜயம் செய்து பாறைகளில் மோதித்தவழும் அமைதியான அலைகளுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் எழிலை பார்த்து ரசிக்கலாம்.
கடற்கரையை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ள கடற்சுவர் மீது அமர்ந்து கருநீல கடற்பரப்பின் அழகை பார்த்து வியக்கலாம். கடற்கரை முழுதுமே தென்னை மற்றும் பனை மரங்கள் நிரம்பியுள்ளதால் ஒரு தீவுச்சோலை போன்ற பசுமையுடன் இது ஜொலிக்கிறது.
இந்த கடற்கரைக்கு அருகிலேயே பயணிகள் அதிகம் புழங்காத அஷோகா பீச் எனும் மற்றொரு கடற்கரையும் உள்ளது.