விழிஞ்சம் ஃபிஷிங் ஹார்பர் என்று அழைக்கப்படும் மீன்பிடி துறைமுகப்பகுதியில் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் உள்ளூர் மின்பகிர்மானத்துடன் இணைக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.இந்தியாவிலேயே இது போன்ற முதல் மின்னுற்பத்தி நிலையம் எனும் புகழைப்பெற்றுள்ள இது ‘அதிரும் நீர்த்தூண்’ தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டு தற்போது இரண்டாம் தலைமுறை தொழில்நுட்ப உத்திகளுடன் கூடிய மின்னுற்பத்தி அடுக்குகளைக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த செலவில் 80 சதவிகிதமானது கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள அலைத்தடுப்பு கான்கிரீட் கட்டுமானத்திற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கரையரிப்பை தடுக்கும் வகையிலான அலைத்தடுப்புகளுடன் மின்னுற்பத்தியையும் இணைக்கும் சிக்கனமான தொழில் நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகளும் முயற்சிகளும் இங்கு தொடர்கின்றன.
விழிஞ்சம் மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தரும்போது இந்த அலை மின்னுற்பத்தி அமைப்புகளையும் பார்ப்பது நல்லது. நீங்கள் குழுவாக செல்லும் பட்சத்தில் இங்குள்ள தொழில் வல்லுனர்களில் ஒருவர் உங்களுக்கு இதன் தொழில் நுட்பம் மற்றும் நன்மைகளை விளக்கிக் கூறக்கூடும்.