குக்கே சுப்ரமண்யா கோயிலை தரிசிக்க வருகை தரும் பயணிகள் தவறாது தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த வேதவியாச சம்புட நரசிம்ம கோயில் ஆகும். ஹிந்து வேதாந்த மரபில் துவைத தத்துவத்தை உருவாக்கிய ஷீ மத்துவாச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கோயில் சுப்ரமண்யா கோயிலின் தென்கிழக்கு மூலையில் உள்ளது.
இங்குள்ள சாளிகிராம நரசிம்மரை பக்தர்கள் தினமும் வழிபடுகின்றனர். இந்த விக்கிரகம் அபிஷேகத்திற்கு மட்டுமே வெளியே எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள லட்சுமி நரசிம்மர் சிலையும், வேத வியாசர் சிலையும் மத்துவாச்சாரியாருக்கு வேதவியாசரால் அளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
விசாக மாதத்தின் போது இந்த கோயிலில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் நரசிம்ம ஜயந்தி திருவிழாவுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். சுப்ரமணிய மடத்தின் குரு ஸ்வாமிகள் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த கோயில் ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.