அருணை கோயில் எனப்படும் இந்த முக்கியமான ஆன்மீகத்தலம் பெஹாவா நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அம்பாலா சாலையில் அமைந்துள்ளது. இது விஸ்வாமித்திர ரிஷி மற்றும் வசிஷ்டர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட புராணிக பின்னணியை கொண்டிருக்கிறது.
சரஸ்வதி மற்றும் அருணா ஆறுகள் ஒன்று சேரும் இடம் என்பது இந்த இடத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். மஹாபாரதம் மற்றும் வாமன புராணத்தில் இந்த ஸ்தலத்தின் சிறப்பு குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
இருப்பினும் தற்போது இது ஒரு முக்கியமான சைவத்திருத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. சங்கமாஷ்வேர் மஹாதேவ் கோயில் எனும் பிரபல்யமான சிவன் கோயில் இங்கு வீற்றிருக்கிறது. ஒரு சிறிய குளத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு வருடந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications