பெரும்பாலான அயல்நாட்டுப் பயணிகளுக்கு இந்தியா ஒரு ஆன்மீகத் திருத்தலமாக விளங்குகின்றது. இந்துக்களின் முக்கிய புனித நகரங்களுள் ஒன்றாக விளங்கும் மதுரா, அதன் பங்குக்கு மனநிம்மதி மற்றும் ஞானத்தைப் பெற விழையும் பயணிகளை ஈர்க்கின்றது.
மகா சுவாமிகளான ஜெய் குருதேவின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜெய் குருதேவ் ஆசிரமத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஆசிரமம் மக்களின் ஆன்மீகத் தேடல்களுக்கு வழிகாட்டும் ஒரு சிறந்த இடமாகத் திகழ்கிறது.