கடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில் கங்க வம்சத்தினரால் ஆளப்பட்ட இந்த நகரம் பின்னர் ஹொய்சள வம்சத்தினராலும் அவர்களைத் தொடர்ந்து மைசூர் உடையார்களாலும் ஆளப்பட்டுள்ளது. ஷீரங்கப்பட்டணாவை ஆண்ட மன்னர்களான ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் இந்த நகரத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்துள்ளனர்.
நஞ்சன்கூடு நகரம் பற்றிய சில தகவல்கள்
இந்த நகரத்தின் முக்கிய தெய்வமாகிய நஞ்சுண்டேஸ்வரரின் பெயரிலேயே இது நஞ்சன்கூடு என்றழைக்கப்படுகிறது. பூலோகத்திலுள்ள உயிர்களைக் காப்பதற்காக ஆலாகால விஷத்தை (திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்டது இந்த விஷம்) அருந்திய சிவபெருமான் இங்கு நஞ்சுண்டேஸ்வர அவதாரமாக குடிகொண்டுள்ளார்.
மேலும் இந்த நஞ்சன்கூடு ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு பிணிகளை தீர்க்கும் சக்தி இருப்பதாக ஐதீகம்.
இது தவிர ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம் மற்றும் பரசுராம க்ஷேத்திரம் என்ற இரண்டு ஆன்மிக ஸ்தலங்களும் நஞ்சன்கூடு நகரத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன. ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் பிரசித்தமான சிலையை இங்கு நஞ்சன்கூடு மடத்தில் காணலாம்.
பெங்களூரிலிருந்து 163 கி.மீ தூரத்திலும் மைசூரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் உள்ள இந்த நஞ்சன்கூடு நகரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக அமைந்துள்ளது. கோயில் நகரமாக மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதார மையமாகவும் இது மாறியுள்ளது.



Click it and Unblock the Notifications