இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை உலகத்தரத்தில் நிர்மாணிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை பல புதிய விரைவுச்சாலைகளை அமைத்து வருகிறது. நாடு முழுவதும் தளவாட திறன் மற்றும் இணைப்பை மேம்படுத்த 50,655 கோடி ரூபாய் முதலீட்டில் 936 கிமீ நீளம் கொண்ட எட்டு தேசிய அதிவேக சாலை தாழ்வார திட்டங்களுக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ஏதாவது பலன் இருக்குமா? தமிழகத்தில் அமைக்கப்படும் புதிய சாலைகள் என்ன என்று இங்கே பார்ப்போம்!
ரூ. 50,000 கோடி செலவில் 8 தேசிய அதிவேக சாலை
ரூ. 50,000 கோடி செலவில் 8 தேசிய அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, நமது பொருளாதார வளர்ச்சியில் பல மடங்கு' விளைவை ஏற்படுத்தும்' மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இது எதிர்காலம் மற்றும் இணைக்கப்பட்ட இந்தியாவுக்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த எட்டு முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4.42 கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த 8 சாலைகள் என்னென்ன
நாசிக் பாடா - கேட் இடையே எட்டு வழிச் சாலையும், ஆக்ரா -குவாலியர் இடையே 88 கிமீ, தரத்-தீசா-மெஹ்சானா - அகமதாபாத் இடையே 214 கிமீ தூரத்துக்கு ஆறு வழிச் சாலைகளும், காரக்பூர்-மோர்கிராம் இடையே 231 கிமீ, அயோத்தியில் 68 கிமீ, ராய்ப்பூர் - ராஞ்சி காரிடோவின் அதல்கான் - கும்லா இடையே 137 கிமீ தூரத்துக்கு நான்கு வழிச் சாலைகளும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு எதுவும் இல்லை. ஆனால் அதற்காக தமிழகத்தில் புதிய சாலைகள் என்று இல்லை, களத்தில் தமிழக அரசே இறங்கியுள்ளது.

களத்தில் இறங்கிய தமிழக அரசு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பல திட்டங்களால் சுமையாக இருப்பதால், மாநிலத்தில் உள்ள மூன்று பெரிய நெடுஞ்சாலைகளின் நான்கு வழிப் பணிகள் மாநில அரசின் தேசிய நெடுஞ்சாலை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. முதன்முறையாக மாநில அரசின் NH பிரிவு பல கோடி ரூபாய் செலவில் இத்தகைய பாரிய திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
மூன்று நான்கு வழிச்சாலை திட்டங்கள்
தூத்துக்குடி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம்-ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, கோவை-சத்தியமங்கலம் வழித்தடத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து தமிழ்நாடு-கர்நாடக எல்லை வரை இருவழிப்பாதை நீட்டிப்பு ஆகிய மூன்று நான்கு வழிச்சாலை திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. கூடுதலாக, பல புறவழிச்சாலை திட்டங்களும், மாநில அரசின் NH பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை ECR நான்கு வழிச்சாலை
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரையிலான 120 கி.மீ கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், நிலம் கையகப்படுத்த ரூ.392.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாமல்லபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை ECR நான்கு வழிச்சாலை NHAI ஆல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலான 120 கி.மீ., தூரம் கடந்த ஆண்டு விரிவாக்கம் செய்வதற்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்
இதேபோல், ராமநாதபுரம்-ராமேஸ்வரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி மாநில தேசிய நெடுஞ்சாலை பிரிவு மூலம் மேற்கொள்ளப்படும். கோயம்புத்தூர்-சத்தியமங்கலம்-தமிழ்நாடு/கர்நாடக எல்லைச் சாலையை விரிவுபடுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது, திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.639.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. "விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்டுமானப் பணிகள் தொடங்கும் எட்ன்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, வேலூர், வேட்டவலம் மற்றும் திருவையாறு ஆகிய பகுதிகளுக்கு NHAI சார்பில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணியை மாநில அரசு மேற்கொள்ளும், இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.559.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications





