இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 6.04 மணிக்கு மெதுவாக தரையிறங்கி உலக நாடுகள் அனைத்தையும் நம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் பொருளாதாரத்தையும் அசுர வேகத்தில் வளர வைக்கும் என்று கூறப்படுகிறது!
தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு
நிலவின் தென் துருவத்தில் லேண்டரை 'மென்மையான தரையிறக்கம்' செய்ததன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து நிலவில் கால் பதித்த 4 ஆவது நாடாக இந்தியா சேர்ந்தது. அதோடு நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவையே சேரும். இந்த பெருமையான தருணத்தை உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி பெருமிதம் கொள்கின்றனர்.

அதிகரிக்கப் போகும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
இந்த சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய பல துறைகளுக்கான வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற வேண்டும் என்ற அதன் கனவை நெருங்கி வருகிறது.
புதிய ஸ்டார்ட்-அப்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டார்கள்
விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க சாதனை வாய்ப்புகளின் புதிய அடிவானத்தைத் திறக்கவுள்ளது. இதன் மூலம் தனியார் முதலீடுகள் உயரும். இந்தியாவில் ஏற்கனவே 140 பதிவுசெய்யப்பட்ட விண்வெளி-தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் உள்ளன. அவை மட்டுமின்றி புதிதாக பல ஸ்டார்ட்-அப்கள் உருவாகுவதோடு, உலகளாவிய முதலீட்டார்களை ஈர்க்கும்.

உலக அளவில் 8-10 சதவீத விண்வெளி பொருளாதாரம்
உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது 2-3 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது, அடுத்த 8-10 ஆண்டுகளில் அது 8-10 சதவீத பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவை செலவு குறைந்த செயற்கைக்கோள் ஏவுதளமாக நிலைநிறுத்தும் மற்றும் உலகளாவிய வாய்ப்பு உருவாகலாம். இதன் மூலம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு ஊக்கம் பெருகும். இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டுக்குள் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப வல்லமை வளர்ச்சி
இந்த தரையிறக்கம் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப வல்லமையை வெளிப்படுத்துகிறது மற்றும் அதன் விஞ்ஞான மனநிலைக்கு புதுப்பிக்கப்பட்ட வீரியத்தை வழங்குகிறது. சந்திரனில் தரையிறங்கும் வெற்றியின் மூலம், ஆய்வு, உதிரிபாக உற்பத்தி, வழிசெலுத்தல் மற்றும் மேப்பிங், கண்காணிப்புத் தரவு மற்றும் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய விண்வெளித் துறையில் ஈடுபட்டுள்ள இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தை உருவாக்கும்.

வலுப்படும் 'மேக் இன் இந்தியா'
இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றியானது 'மேக் இன் இந்தியா' பிராண்டை மேலும் வலுப்படுத்தும் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள், தொலைத்தொடர்பு மற்றும் பலவற்றை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
பல தொழில்துறை நிறுவனங்களுக்கு நன்மை
விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தை நோக்கி உபகரணங்களை வடிவமைத்தல், அசெம்பிள் செய்தல் மற்றும் சோதனை செய்தல் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் இந்த வெற்றி உதவிகரமாக இருக்கும்.
உலகின் 3ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறப்போகும் இந்தியா
இது போன்ற வரலாற்று, வாழ்நாளில் ஒரு முறை, நம் நாட்டை ஒருங்கிணைக்கும் தருணங்கள், இந்திய இளைஞர்களிடையே அதிகரித்த அறிவியல் மனப்பான்மைக்கு வழி வகுக்கின்றன, வளர்ந்து வரும் துறைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் தன்னிறைவுக்கான விரைவான பாதையாகும். மேலும் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதற்கான நம்பிக்கையை ஊட்டுகிறது



Click it and Unblock the Notifications





