BBMP என்றழைக்கப்படும், ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே பராமரிப்பு பணிகளுக்காக தேவராபிசனஹள்ளி-சக்ரா சாலையை 60 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. இது மைந்த்ரா அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் பெல்லந்தூர் கோடி வரை நீண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் போக்குவரத்து ஓட்டத்தை நிர்வகிக்க, பெங்களூரு போக்குவரத்து காவல்துறை பல மாற்று வழிகளை பரிந்துரைத்துள்ளது. அதனை தெரிந்துக் கொண்டு அந்த வழிகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று பெங்களூரு போலீசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்!

பெங்களூருவின் டிராஃபிக் பற்றி சொல்லவே வேண்டாம்
பெங்களூரு இந்தியாவில் மிக மோசமான போக்குவரத்துக்கு பெயர்போனது, உலகளவில் மிகவும் நெரிசலான நகரங்களில் தொடர்ந்து தரவரிசையில் உள்ளது. இது விரைவான நகரமயமாக்கல், திட்டமிடப்படாத உள்கட்டமைப்பு, குறுகிய சாலைகள் மற்றும் தொழில்நுட்ப மையமாக நகரத்தின் வளர்ச்சியால் தூண்டப்பட்ட பெருகிவரும் வாகன மக்கள்தொகை ஆகியவை காரணமாகும். இதில் பராமரிப்பு பணிகளுக்காக சாலைகள் மூடப்படும் போது பெங்களூரு மக்கள் மிகவும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.
பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள முக்கிய சாலை
சாலையின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில், பெங்களூருவின் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) தேவராபிசனஹள்ளி-சக்ரா சாலையின் ஒரு முக்கியமான பாதையை 60 நாட்களுக்கு மூட திட்டமிட்டுள்ளது. இந்த சாலை, மைந்த்ரா அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெல்லந்தூர் கோடி வரை, சாலையின் மேற்பரப்பில் சேர்க்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு, அதன் தரம் மற்றும் நீடித்து நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பெங்களூரு மக்கள் மற்றும் பெங்களூருக்கு வந்து செல்லும் பயணிகள் நலனுக்காக மாற்றுப்பாதைகளை பெங்களூரு போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
பெங்களூர் நோக்கி வரும் பயணிகள் கவனத்திற்கு
1. தேவாரபிசனஹள்ளி மற்றும் பெல்லந்தூரில் இருந்து வாகன ஓட்டிகள் வெளிவட்ட சாலையில் இடதுபுறம் திரும்ப வேண்டும். பின்னர், கடுபீசனஹள்ளி பாலத்திற்குச் சென்று, மாரத்தஹள்ளி பாலத்தைக் கடந்து, யமலூர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
2. கடுபீசனஹள்ளி அல்லது தேவராபிசனஹள்ளியிலிருந்து செல்பவர்கள் கரியம்மனை அக்ரஹார சாலையில் செல்ல வேண்டும். பின்னர், யமலூர் கிராமம் வழியாக, பழைய விமான நிலைய சாலையில் சேர வேண்டும்.
3. வெளிவட்ட சாலையிலிருந்து நகர மையப் பயணங்களுக்கு, ஓட்டுநர்கள் பெல்லந்தூர் கோடியில் இடதுபுறம் திரும்பி யமலூர் சந்திப்பு வழியாக பழைய விமான நிலையச் சாலைக்குச் செல்ல வேண்டும்.
பெங்களூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு
1. யமலூரில் இருந்து தேவராபிசனஹள்ளி மற்றும் பெல்லந்தூர் செல்லும் வாகன ஓட்டிகள் யமலூர் சந்திப்பு வழியாக பழைய விமான நிலைய சாலையை பயன்படுத்த வேண்டும். பின்னர், மாரத்தஹள்ளி பாலத்தின் வழியாகச் சென்று, பின்னர் கடுபீசனஹள்ளி பாலத்தின் வழியாக வெளிவட்டச் சாலையை அணுகலாம்.
2. யமலூரில் இருந்து கடுபீசனஹள்ளி மற்றும் தேவராபிசனஹள்ளிக்கு செல்பவர்கள் யமலூர் கோடியில் இடதுபுறம் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பின்னர், பழைய விமான நிலைய சாலையில் யமலூர் சந்திப்பைத் தாண்டி, கரியம்மனை அக்ரஹார சாலையைப் பயன்படுத்தவும்.
3. யமலூரிலிருந்து வெளிவட்டச் சாலைப் பயணங்களுக்கு, ஓட்டுநர்கள் யமலூர் கோடியில் வலதுபுறம் திரும்பி பெல்லந்தூர் கோடியை நோக்கி யமலூர் கிராமம் வழியாகச் செல்ல வேண்டும்.
இந்தப் பகுதிகளை பயன்படுத்த வேண்டாம்
யமலூர் மற்றும் பெல்லந்தூர் ஏரிப் பகுதிகளில் நெரிசல் ஏற்படுவதால் அந்த பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் என்று வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். டிசிபி போக்குவரத்து கிழக்குப் பிரிவு, குல்தீப் குமார் ஆர். ஜெயின், சாலை மேம்பாட்டுப் பணிகளின் போது சீரான போக்குவரத்தைப் பராமரிக்க, இந்த மாற்று வழிகளைப் பின்பற்றுவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



Click it and Unblock the Notifications






