எங்கே வேலை பார்த்து கொண்டிருந்தாலும் தீபாவளி மற்றும் பொங்கல் அன்று தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சொந்த பந்தத்துடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்! இதனால், இந்த நேரத்தில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சமீபத்திய தகவல்கள் படி, தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான ரயில் டிக்கெட் விற்பனை ஜூன் 30, 2024 ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனை தொடங்கப்பட்டது. ஆனால், தீபாவளி சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகள் அடுத்த 5 நிமிடங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்துவிட்டன. இன்னும் பாதி பேர் டிக்கெட் புக் செய்யவே இல்லை என இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கூடுதல் ரயில்களை இயக்குமா தென்னக ரயில்வே?
கண் இமைக்கும் நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
தீபாவளி சீசன் இந்திய இரயில்வேயில் மிகவும் பரபரப்பான ஒன்றாகும். பண்டிகைகளின் போது லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் இருப்பதற்காக முக்கிய நகரங்களுக்குச் செல்கின்றனர். இந்த உயர் தேவையை மனதில் வைத்து, இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது, இது பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். சமீபத்தில், தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன! ஆம், நீங்கள் படித்தது சரிதான்!

5 நிமிடங்களில் காலியான தென்காசி, மதுரை டிக்கெட்டுகள்
சென்னையில் இருந்து தென்காசி மற்றும் மதுரைக்கு தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன! ஆஃப்லைனில் டிக்கெட் வாங்கச் சென்ற மக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். காலை 6 மணி முதல் எழும்பூர் ஸ்டேஷனில் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு இதுதான் நடந்தது. முதல் மூன்று நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்ததாக கூறப்படுகிறது. மற்ற அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்று தீர்ந்துவிட்டனவாம்.
15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த திருநெல்வேலி, குருவாயூர் டிக்கெட்டுகள்
தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய இரண்டும் மிக அதிகமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும். இதனால், இந்த நேரத்தில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சமீபத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையின்படி, தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான ரயில் டிக்கெட் விற்பனை ஜூன் 30, 2024 ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனையானது. இவை அக்டோபர் 29, 2024 அன்று ஓடும் ரயில்களுக்கானது. திருநெல்வேலி மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்களுக்கான டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன! இந்த ரயில் டிக்கெட்டுகள் மட்டும் அனல் பறக்க விற்று தீர்ந்தன

கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
ஒரு சில ரயில்களுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 1 மற்றும் 2 தேதிகளில் விற்பனைக்கு வந்தன. இன்னும் விற்றுத் தீரவில்லை என்றாலும், விரைவில் விற்றுத் தீர்ந்து விடும். மேலும் ரயில்களை இயக்க ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. டிக்கெட் பெறத் தவறிய பிறகு, பலர் இருக்கைகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள், இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும். அதனால் சிறப்பி ரயில்களை இயக்க வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன!



Click it and Unblock the Notifications





