மாண்டஸ் புயல் சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் மையம் கொண்டு டிசம்பர் 9 ஆம் தேதி பலத்த மழை மற்றும் சூறைக் காற்றுடன் கரையை கடந்தது. ஆனால் இதே டிசம்பர் 9 ஆம் தேதி, 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு புதுச்சேரியை இதே மாதிரி ஒரு பலத்த புயல் தாக்கியதாம். அந்த வரலாறு மீண்டும் பதிவாகி உள்ளது பாருங்களேன். அப்பொழுது பெய்த பலத்த மழையும் சூறைக் காற்றும் தான் புயல் என்ற பெயரை கொண்டு வந்ததாம்! இதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

இதே நாளில் சென்னையை சிதறடித்த புயல்
1807 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி சரியாக 215 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதாவது 1807 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி, கடுமையான புயல் சென்னை நகரைத் தாக்கி இரண்டே நாட்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
1859 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி புயல் மூன்று நாட்கள் நீடித்தது. 1884 டிசம்பர் 12-ம் தேதி நாகப்பட்டணத்தில் உருவான மற்றொரு புயல், டிசம்பர் 19-ம் தேதிதான் கரையைக் கடந்தது அந்த புயல் 7 நாட்கள் நீடித்தது. இந்த புயல் தான் அதிக நாட்கள் நீடித்த புயலாகும். பொதுவாக புயலில் தாக்கம் 2-3 நாட்கள் மட்டுமே நீடிக்கிறது.

புயல் என்ற வார்த்தை உருவான வரலாறு
"Cyclone" என்ற வார்த்தை முதன் முதலில் இந்தியாவில் தான் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம்! இந்த வார்த்தை முதலில் ஒலித்த நகரம் கல்கத்தா அதாவது இன்றைய கொல்கத்தா. கல்கத்தா மரைன் கோர்ட்டின் தலைவராகப் பணியாற்றிய ஆங்கிலேயர், ஹென்றி பிடிங்டன் கடல் கேப்டனாகவும் இருந்தார். அப்பொழுது இருந்த கடல் சீற்றமும், மழையும், சூறைக் காற்றும் அவரை சற்று சிந்திக்க வைத்ததால், இந்தியப் பெருங்கடலில் வானிலை ஆய்வு செய்தார்.

20000 க்கும் அதிகமான மக்களை காவு வாங்கிய மக்கள்
மழை மற்றும் சூறைக் காற்றை ஆய்வு செய்த ஹென்றி பிடிங்டன், 3 பயங்கரமான புயலால் ஏற்பட்ட சேதத்தால் கடலோர நகரமான கோரிங்கா மூழ்கியதை கண்டுபிடித்தார். இந்த பேரழிவு 1789 ஆம் ஆண்டு நடந்ததாம், இதனை நீண்ட நாட்கள் ஆய்வு செய்த ஹென்றி பிடிங்டன், 1840 ஆம் ஆண்டு பிடிங்டன் தனது ஆராய்ச்சியை முன் வைத்தார். வங்காளத்தின் ஆசிய சங்கம் 1789 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை, ஒரு புயல் "cyclone" என பெயர் சூட்டியது. அன்றிலிருந்து தான் புயல் என்ற வார்த்தை உபயோகத்திற்கு வந்தது.

சைக்ளோன் வரலாறு
சைக்ளோன் வார்த்தையின் அர்த்தம் 'சைக்ளோன்' என்பது கிரேக்க வார்த்தையான 'கைக்லோன்' என்பதிலிருந்து உருவானது, அதாவது 'பாம்பின் சுருள்' போன்ற ஒரு வட்டத்தில் நகர்கிறது. வங்காள விரிகுடாவில் சூறாவளி புயல்களை எதிர்கொண்ட கப்பல்களில் இருந்து பல மேகங்கள் மற்றும் காற்று அறிக்கைகளை ஆய்வு செய்ததில், மேகப் பட்டைகளின் இந்த சுழல் வடிவம் முதன்முதலில் பிடிங்டனால் கண்டுபிடிக்கப்பட்டது. பிடிங்டன் 1848 ஆம் ஆண்டில் மாலுமிகளின் புத்தகமான தி மாலுமிகள் கொம்பு புத்தகத்தில் புயல்களின் சட்டத்திற்கான இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.

உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்
வடமேற்கு பசிபிக் பகுதியில் 'டைஃபூன்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. வடக்கு அட்லாண்டிக்கில் இவை 'ஹரிகேன்' என்ற வார்த்தை உபயோகத்தில் உள்ளது. இந்தியப் பெருங்கடலை சுற்றியுள்ளப் பகுதிகளில் இவை 'சைக்ளோன்' என்று அழைக்கப்படுகின்றன. இந்தியில் சக்கரவாத் என்றும், தமிழில் 'புயல்', 'கடுவல்லி', 'சூரவளி', 'சுரவரி', 'சுர' என்றால் புயல் என்றும், 'பெருங்காற்று', 'பெருவள்ளி',' சித்திரைசூழ்ழி', 'சுழல்கற்று', 'வாலி' என்றும் அழைக்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications





