தென்மேற்கு பருவமழை மிக வேகமாக நெருங்கி வருகிறது, அதனால் இந்தியாவின் பல பகுதிகளிலும் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கூற்றுப்படி, தற்போது தென் உள் தமிழகத்தின் மீது ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது, அதே நேரத்தில் மேற்கு விதர்பா மற்றும் தென் தமிழ்நாடு இடையே ஒரு பள்ளம் நீண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிக கன மற்றும் கன மழைப் பொழியும் என்று கூறப்படுகிறது!
முன்கூட்டியே தாகம் தணிக்க வந்த பருவமழை
கடந்த இரண்டு நாட்களில், வானிலை முறைகளில் சில கடுமையான மாற்றங்களைக் கண்டுள்ளது. வெப்பச்சலனத்துடன் காணப்பட்ட பல இடங்களில் தற்போது மழை மற்றும் புயலான வானிலை நிலவுகிறது. ஏற்கனவே கொமோரின் பகுதி, தெற்கு வங்காள விரிகுடா மற்றும் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் பருவமழையின் வருகைக்கு முன்னதாக, தென் தீபகற்ப இந்தியா ஏற்கனவே மிகவும் தீவிரமான மழைப்பொழிவை அனுபவித்து வருகிறது. மேலும், மழை தற்போது வரை கைவிடும் எண்ணம் இல்லை என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கூற்றுப்படி, தற்போது தென் உள் தமிழகத்தின் மீது ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது, அதே நேரத்தில் மேற்கு விதர்பா மற்றும் தென் தமிழ்நாடு இடையே ஒரு பள்ளம் நீண்டுள்ளது. இதற்கிடையில், மே 22 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி வாக்கில் வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிய வாய்ப்புள்ளது.

ஒருவர் உயிரிழப்பு - தயார் நிலையில் மீட்பு படைகள்
மாநிலத்தில் தற்போது மிகக் கடுமையான மழை பெய்து வருகிறது, வெள்ளிக்கிழமை பெய்த மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பதிவான இந்த சம்பவம், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 17 வயது நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன
தமிழகத்தின் வெதர் ரிப்போர்ட்
1. தமிழகத்தின் நான்கு தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது மண்டல வானிலை ஆய்வு மையம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. அதே நேரத்தில் விருதுநகர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. மேலும் தமிழகத்தின் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஆர்எம்சி தெரிவித்துள்ளது.
4. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மே 24-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
5. இதனால் சென்னை, புதுவை, கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் பரவலாக மழைப் பெய்யகூடும்.
6. திங்கள் மற்றும் புதன்கிழமை (மே 20-22) இடையே மிக கனமழை (204.5 மி.மீ.க்கு மேல்) தமிழகத்தில் மிக அதிகமாகப் பெய்யக்கூடும். அதன்பிறகு, தமிழகத்தில் வியாழக்கிழமை (மே 23) கனமழை முதல் மிக கனமழை (64.5 மி.மீ.-204.5 மி.மீ.) பெய்யக்கூடும்.



Click it and Unblock the Notifications





