நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆல் உருவாக்கப்பட்ட யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உலக பணப் பரிவர்த்தனைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை போல டிஜிட்டல் பேமெண்ட்களில் எந்த உலக நாடும் வளரவில்லை என்பதே நிதர்சன உண்மை. இதனால் இந்திய மக்கள் இந்தியாவுக்குள் எந்தவித சிரமுமின்றி ஆட்டோவில் பயணம், காய்கறி வாங்குதல், ஹோட்டல், ஷாப்பிங் என எதற்கும் சில்லறைக்காக காத்திருக்காமல் சிறப்பாக டிஜிட்டல் பேமெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இப்போது இந்தியாவிற்கு வரும் சர்வதேச பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் கட்டண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் 'UPI One World' வாலட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான சேவை, நிகழ்நேரத்தில் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதாக உறுதியளிக்கிறது, மேலும் இந்தியாவை ஆராய சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
டிஜிட்டல் பேமெண்ட்களில் இந்தியா தான் முன்னோடி
UPI என்பது மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கும் நிகழ்நேர கட்டண முறை. பரிவர்த்தனைகளை எளிமையாக்கி பாதுகாப்பதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கடந்த ஆண்டுகளில் உலக வல்லரசு நாடுகளை விட டிஜிட்டல் பேமெண்ட்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களது மொபைல் போன்களில் பேமெண்ட் செய்வதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் மேம்பட்ட பண பரிவர்த்தனை
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்காக UPI One World Wallet சேவையை அறிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வருவதற்கு நிறைய வசதிகள் கிடைக்கும். பயணத்தை எளிதாக்கவும் நிகழ்நேர டிஜிட்டல் கட்டணத்தை மேம்படுத்தவும் 'UPI One World' வாலட் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் போது UPI One World Wallet முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேவையின்றி அந்நிய செலாவணிக்கு பணம் கட்ட வேண்டாம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதலின் கீழ் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் டிரான்ஸ்கார்ப் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியை என்பிசிஐ தொடங்கியுள்ளது. இந்தச் சேவையின் மூலம், பயணிகள் அதிக அளவு பணம் அல்லது பல அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளை எடுத்துச் செல்வதில் இருந்து விடுபடுவார்கள். இந்த சேவையில், இந்திய வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் அவர்கள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) அமைப்பை அணுகவும், அதைப் பயன்படுத்தி பணம் செலுத்தவும் முடியும்.
UPI One World Wallet ஐ எவ்வாறு பயன்படுத்துவது
1. வழங்குபவர் பயன்பாட்டைப் பதிவிறக்கி உள்நுழையவும்.
2. வழங்குபவர் கவுண்டரில் ஆவணங்களை (பாஸ்போர்ட் மற்றும் செல்லுபடியாகும் விசா) சரிபார்க்கவும்.
3. சர்வதேச மொபைல் எண்ணில் UPI One World ஐ ரெஜிஸ்டர் செய்யவும்
4. விரும்பிய தொகைக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பை ஏற்றவும்
5. அந்நிய செலாவணி நிபுணர்களின் உதவியுடன் வழங்குபவர் கவுண்டரில் வெளிநாட்டு நாணயத்தை மாற்றுவது
6. கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு முறையில்.
7. வணிக விற்பனை நிலையங்களில் முன்பே ஏற்றப்பட்ட இந்திய ரூபாயை பயன்படுத்தவும்.
8. புறப்படுவதற்கு முன் பயணி ஏற்றிய மீதி இருப்பை பணமாக்குங்கள்
இந்த சேவை வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே
இந்த அம்சத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், பயனர்கள் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது, அவர்கள் ஆன்லைனில் பணம் செலுத்த முடியும். என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டினர் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏதேனும் இருப்பு இருந்தால், அது திருப்பித் தரப்படும். இதற்கு அந்நிய செலாவணி கட்டுப்பாடு பயன்படுத்தப்படும். அதாவது மாற்று விகிதத்தின் கீழ் மட்டுமே இதன் பலனைப் பெற முடியும்.



Click it and Unblock the Notifications





