Search
  • Follow NativePlanet
Share
» »பூமிக்கு அருகில் வரும் சனி கிரகம் – சனி கிரகத்தின் வளையங்களை வெறும் கண்களாலே பார்க்க முடியும்!

பூமிக்கு அருகில் வரும் சனி கிரகம் – சனி கிரகத்தின் வளையங்களை வெறும் கண்களாலே பார்க்க முடியும்!

பூமிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கிரகம் என்றால் அது 'வெள்ளி' என்று தான் நமக்கு தெரியும். தினமும் அதிகாலையில் வானத்தை பார்த்தால் ஒரு நட்சத்திரம் மட்டும் ஜொலித்துக் கொண்டே இருப்பது போல தெரியும், அது தான் 'வெள்ளி'. ஆனால் இப்போது நீங்கள் வெறும் கண்களில் சனி கிரகத்தையும், சனியைச் சுற்றியுள்ள வளையங்களையும் பார்க்கலாம்!

சனியின் 7 வளையங்களும் 82 நிலவுகளும்

சனி சூரிய குடும்பத்தில் மிகவும் தனித்துவமான கிரகங்களில் ஒன்றாகும். இந்த கிரகம் ஊடகங்கள், ஜோதிடம் மற்றும் வானியல் ஆகியவற்றில் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பரந்த அதிசயங்களைக் கொண்டுள்ளது. சூரியனில் இருந்து ஆறாவது கிரகமாக இருக்கும் சனி, பெரும்பாலும் சூடான காற்றால் நிரப்பட்டுள்ளதாதாக விஞ்ஞானிகள் கூருகின்றனர். சனியைச் சுற்றி 7 வளையங்களும் 82 நிலவுகளும் உள்ளன.

1

சூரிய குடும்பத்தில் ஆறாவது கிரகம்

சனி சூரியனில் இருந்து சுமார் 886 மில்லியன் மைல்கள் (1.4 பில்லியன் கிமீ) தொலைவில் உள்ள ஆறாவது கிரகமாகும். புதன், வீனஸ், பூமி, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ளன. சனிக்கு அடுத்தபடியாக யுரேனஸ் மற்றும் நெப்டியூன் உள்ளன.

அதிக ஆய்வு செய்யப்படாத சனி கிரகம்

அவ்வப்போது நிலவுக்கும், செவ்வாய்க்கும், வியாழனுக்கும் செயற்கை கோள்கள் அனுப்பபடுகின்றன. ஆனால், சில விண்வெளி பயணங்கள் மட்டுமே சனி கிரகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. ஏனெனில் கிரகம் பெரும்பாலும் நச்சு வாயுக்களால் ஆனது மற்றும் தரையிறங்குவதற்கு திடமான நிலம் இல்லை. சனிக்கோளின் ஈர்ப்பு விசை மனிதர்களால் பார்க்க முடியாத அளவுக்கு வலிமையானது.

பூமிக்கு எதிரே இருக்கும் சனி

சனி கிரகம் பூமியை விட ஒன்பது மடங்கு அகலமானது. சனி கிரகத்தை சுற்றியுள்ள வாயுக்கள் ஒரு வளையம் போல காட்சியளிக்கின்றன. சனியின் சுற்றுப்பாதை சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களுடன் அதன் நிலையை நேரடியாக பாதிக்கிறது. ஆராய்ச்சியின் மூலம், வானியலாளர்கள் பூமி ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஒவ்வொரு 378 பூமி நாட்களுக்கும் சனி எதிர்ப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

2

ஆகஸ்ட் 27 அன்று சனி கிரகத்தை காண தவறாதீர்கள்

ஆகஸ்ட் 18 மற்றும் செப்டம்பர் 11 க்கு இடையில் சனி கிரகம் பூமிக்கு அருகில் மிகவும் பிரகாசமாக தோன்றும், ஏனெனில் சூரியன் கிரகத்தின் முகத்தை முழுமையாக ஒளிரச் செய்யும். குறிப்பாக, ஆகஸ்ட் 27 அன்று சனி எதிர்நிலையில் இருக்கும், பூமிக்கு மிக அருகில் வரும். இந்த நாளில் இந்தியாவில் இருந்து சனியை நன்கு காண முடியும். சூரியன் மறையும் போது சனி உதயமாகும், எனவே மாலை மற்றும் இரவு முழுவதும் கிரகத்தைப் பார்க்க சிறந்த நேரமாகும்.

வெறும் கண்களினால் சனியை பார்க்கலாம்

நீங்கள் வெறும் கண்களினாலே சனி கிரகத்தை பார்த்து ரசிக்கலாம். ஏனெனில் அது ஒரு பெரிய, பிரகாசமான நட்சத்திரம் போல் தோன்றும். இருப்பினும், தொலைநோக்கிகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது அதன் அம்சங்களை நன்றாகப் பார்க்க உதவும். நீங்கள் கிரகத்தின் வளையங்களைப் பார்க்க விரும்பினால் (அதன் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று), உங்களுக்கு ஒரு தொலைநோக்கி தேவைப்படும்.

தமிழகத்தில் உள்ள கோளரங்கங்கள்

1. வைனுபாபு அப்சர்வட்டரி, காவலூர்

2. சோலார் அப்சர்வேட்டரி, கொடைக்கானல்

3. பிர்லா கோளரங்கம், சென்னை

4. அண்ணா அறிவியல் கோளரங்கம், திருச்சி

5. நிகையா அப்சர்வேட்டரி, ஓசூர்

6. A.P.J அப்துல் கலாம் புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம், புதுச்சேரி

இந்த நாளை மறந்து விடாதீர்கள்

சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கிரகமாக, சனி ஒரு வலுவான வசீகரத்தை கொண்டுள்ளது மற்றும் அதன் வான அதிசயத்திற்காகப் பேசப்படுகிறது. இந்த ஆண்டு சனி கிரகத்தை அதன் அனைத்து மகிமையிலும் பார்க்க விரும்பினால், ஆகஸ்ட் 27 அன்று உங்கள் நாட்காட்டியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!

More News

Read more about: travel news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+