முதல் பானிபட் யுத்தத்தில் இப்ராஹிம் லோடியை வீழ்த்திய வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாபர் உருவாக்கிய காபூலி பாக்-கில் தோட்டம், ஒரு மசூதி மற்றும் ஒரு குளம் ஆகியவை உள்ளன. அவர் தன்னுடைய மனைவி முஸ்ஸம்மாட் காபூலி பேகத்தின் நினைவாக இந்த தோட்டத்திற்கும், மசூதிக்கும் அவருடைய பெயரை வைத்தார்.
6 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரின் மகன் ஹுமாயூன் சலீம் ஷா-வை வெற்றி கொண்டதன் நினைவாக சபூட்ரா என்ற மேடையை உருவாக்கி 'பதே முபாரக்' என்று பெயரிட்டார். இதில் உள்ள பதிவுகள் ஹிர்ஜி ஆண்டில் 934-யும், அதற்கு இணையான கி.பி.1557-ம் ஆண்டையும் குறிப்பிடுவதாகஉள்ளது.
இந்த மசூதியின் இருபக்கங்களிலும் இரண்டு அறைகள் உள்ளன. இதன் சுற்றுச்சுவர்களில் பெர்சிய வார்த்தைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் சதுர வடிவ பிரார்த்தனைக் கூடத்தின் பக்கங்களில் துணைப்பகுதிகள் உள்ளன.
அவை ஒவ்வொன்றிலும் 9 பிரிவுகளும் மற்றும் அரை வட்ட வடிவமான கீழ் நோக்கிய ட்ரம்களும் உள்ளன. இந்த மசூதியின் உயரமான கூரையில் சுண்ணாம்பு பூச்சும் மற்றும் பல்வேறு அட்டைகளும் உள்ளன.
பானிபட் நகரத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவிலேயே இருக்கும் இந்த நினைவிடத்தில் மசூதி, குளம் மற்றும் தோட்டம் ஆகியவை ஒன்றாக இருப்பதால் இது ஒரு மிகச்சரியான சுற்றுலா அமைவிடமாக உள்ளது.