கோதிக் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கார்ட்டன் கேஸில் 1904 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சியில் கோடைக்கால தலைநகராக விளங்கிய இந்த கட்டிடம் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் சர் ஸ்வின்டன் ஜேகப் அவர்களால் நிறுவப்பட்டது.
இக்கட்டிடத்தின் மேல்மாடம் மிகவும் நுணுக்கமான ராஜஸ்தான் ஜாலி வலைப்பின்னல் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 3 மாடிகளும் 125 அறைகளும் கொண்ட இந்த மாளிகை பிரிட்டிஷ் ஆட்சியின் போது தலைமைச்செயலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது மேலும் தற்போது அரசு தலைமை கணக்காயர் (Accountant General) அலுவலகமாக உள்ளது.
சஞ்சாவுலி கல் (Sanjauli stone) கொண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டது மேலும் சமீபத்தில் சிவப்பு ஓடு பதிக்கபெற்ற இதன் கூரையானது சிவப்பு முலாம் பூசப்பட்ட இரும்பு ஷீட்டினால் மாற்றியமைக்கப்பட்டது. அந்தமானிலிருந்து வரவழைக்கப்பட்ட கருங்காலி மரத்தொகுதிகள் இந்த கட்டிடத்தை சூழ்ந்துள்ளது.