இந்தியா சூரியன் முத்தமிடும் கடற்கரைகளிலிருந்து பனி உடை உடுத்திய மலைகள் வரை திகைப்பூட்டும் இயற்கை அழகின் வசிப்பிடம் ஆகும்.
இந்தியா குளிர்ச்சியான மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களைக் கொண்ட பல அமைதியான கடற்கரைகளின் வீடாக விளங்குகிறது. கடற்கரையின் காதலர்கள் மற்றும் அமைதியை தேடுபவர்களுக்கு இது ஒரு சரியான விருந்தை அளிக்கிறது. பனந்தோப்புகள், நீலக்கடல், தங்க மணல் மற்றும் நீரலைகளின் மயக்கும் காட்சிகள் உங்கள் வாழ்க்கையை நேர்மறையான எண்ணங்களால் நிரப்பும்.
கடற்கரைகள் உங்களை சூரியன், மணல் மற்றும் கடலில் ஈடுபடுத்திக் கொள்ள சரியான விடுமுறை பயண இலக்குகளாகக் கருதப்படுகிறது. உங்களை அனைத்து எண்ணங்களிலிருந்தும் விடுவித்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் மற்றும் ஒவ்வொரு கனத்தையும் மகிழ்ந்து அனுபவிக்கவும் ஏற்ற ஒரு இடமாகும்!
சில கடற்கரைகள் ஏராளமான இயற்கை அழகு மற்றும் கண்ணுக்கினிய இயற்கை நிலக்காட்சிகளுடன் மிக அழகான அமைவிடங்களில் உள்ளன. இங்குள்ள கடற்கரைகள் ஒரு வெப்ப மண்டல சொர்க்கம் ஆகும் மற்றும் கடலோர சமையல்கள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி ஆகும்.
நாங்கள் அத்தகைய ஒரு நீண்ட வார இறுதியில் கண்டுகளிக்கக் கூடிய 5 கடற்கரைகளை பற்றி இங்கே உங்களுக்கு அளிக்கிறோம்.

செராய் கடற்கரை, கொச்சி :
செராய் கடல் மற்றும் உப்பங்கழி நீரின் ஒரு தனித்தன்மையான சேர்க்கை ஆகும். இந்த கடற்கரையில் உள்ள வரிசையான தென்னை மரங்கள் நீங்கள் ஒரு தீவில் இருப்பது போன்ற உணர்வை தரும். குதிரை சவாரி மற்றும் பட்டங்கள் பறக்க விடுவதை தவிர இந்த கடற்கரையின் கரையில் வேறு எந்த நடவடிக்கைகளும் இருப்பதில்லை. நீங்கள் உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளவும் மற்றும் புத்துணர்ச்சி அடையவும் விரும்பினால், அதற்கு செராய் கடற்கரை ஒரு நல்லத் தேர்வாகும். இது பெங்களூரூவிலிருந்து 524 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பத்திரிக்கையாளர் மரியாதை: யசுதீப் மங்கலப்பள்ளி

அமைதிக் கடற்கரை, பாண்டிச்சேரி :
பெங்களூரூவிலிருந்து 321 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமைதி கடற்கரை சூரியன், மணல் மற்றும் நீரலைகளால் உங்களுக்கு விருந்தளிக்கும் ஒரு நேர்த்தியான இடமாகும். தங்க நிறமான மணல் மற்றும் வங்காள விரிகுடாவின் நடனமாடும் அலைகளுடன் இந்த இடம் நீர் சறுக்கு விளையாட்டைக் கற்றுக் கொள்ள ஏற்ற இடமாகும்.
ஒருவர் மணலில் படுத்துக் கொண்டு ப்ரெஞ்ச் சமையலை ருசிப்பார்த்துக் கொண்டே சூரியக் குளியல் எடுக்கலாம்.
பத்திரிக்கையாளர் மரியாதை: கார்த்திக் ஈஸ்வர்

பனம்பூர் கடற்கரை, மங்களூர் :
இது மங்களூரிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த கடற்கரை உங்களுக்கு இசை, கடல் உணவு, சாகச விளையாட்டுகள், அமைதியான சுற்றுப்புறங்கள் மற்றும் கடற்கரை உல்லாச விடுதிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறது.
இது மிகவும் சுத்தமான மற்றும் சுகாதாரமான கடற்கரை ஆகும், நட்பான மற்றும் கருணை நெஞ்சம் கொண்ட உள்ளூர் வாசிகளுக்கு பெயர் பெற்றது. மேலும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவிற்கு பெயர் பெற்றதாகும்.
பெங்களூரூவிலிருந்து பனம்பூர் கடற்கரை 358 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பத்திரிக்கையாளர் மரியாதை: கோட் பாண்டா

கலன்கூட் கடற்கரை, கோவா ;
இது வடக்கு கோவாவின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றாகும். இது பெங்களூரூவிலிருந்து 602 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கோவாவிலுள்ள நிகழ்வுகள் நிறைந்த கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த கடற்கரைக்குள் நுழைந்த உடனே உங்களுக்காக கடை விரிக்கப்பட்டிருக்கும் பல்வேறு நீர் விளையாட்டுகளை விட்டு உங்கள் கண்கள் அகலாது.
இந்த கடற்கரையில் சுழல்களில் இயக்கப்படும் இசை, உங்கள் சிறந்த பாதங்களை முன்னோக்கி ஆடுமாறு செலுத்தும். பல்வேறு ஹோட்டல்களால் சிறு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நல்ல உணவுப் பரிமாறப்படுகிறது
பத்திரிக்கையாளர் மரியாதை: ஹரிஹரன்

முழப்பிளங்கடி கடற்கரை, கன்னூர்:
பெங்களூரூவிலிருந்து சுமார் 321 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால், ஒருவர் இந்தியாவின் மிக நீளமான மற்றும் வாகனங்கள் ஓட்டக்கூடிய ஒரே கடற்கரையை அடையலாம். கடற்கரைக்கு செல்லும் வழி முழுவதும் தென்னந் தோப்புகளால் சூழப்பட்டுள்ளது, அது இந்த கடற்கரையின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.
இந்தக் கடற்கரையின் வாகனப் பயணம் இதன் முக்கிய ஈர்ப்பாகும். இதன் சத்தங்களற்ற அமைதியான சூழ்நிலைகளுடன் சூரிய அஸ்தமனம் மற்றும் கடற்கரைக் காட்சிகள் உங்களை வாயடைத்துப் போக செய்யும்.
பத்திரிக்கையாளர் மரியாதை: செபஸ்டீன் ஆனந்த்.



Click it and Unblock the Notifications




