தமிழ்நாட்டில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலங்களில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையும் ஒன்றாகும். நீங்கள் சென்னையில் இருந்து ஒரு மலை வாசஸ்தலத்திற்கு விடுமுறையில் செல்ல திட்டமிட்டால், கொல்லி மலை உங்களுக்கு ஒரு பெஸ்ட் சாய்ஸ். இது நிச்சயம் ஊட்டி, கொடைக்கானல் போல வணிக தீண்டலால் பாழடையாமல் இயற்கையோடு உங்களை ஒன்றிணைய வைக்கிறது. அனல்பறக்கும் சென்னை வெயிலில் இருந்து தப்பித்து, ஜில்லென்ற காற்று முகத்தில் வீச, இயற்கை சாரலில் நனைந்து, ஒரு அமைதியான விடுமுறையயை கழிக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்!
சென்னையிலிருந்து கொல்லிமலைக்கு எப்படி செல்வது
சென்னையிலிருந்து கொல்லி மலை 376 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. நேரடியாக சென்னையிலிருந்து கொல்லிமலைக்கு பேருந்துகள் இல்லை. நாம் பட்ஜெட்டில் சுற்றுலா செல்லப் போகிறோம், ஆதலால் ரயில் அல்லது பேருந்து தான் சரியான சாய்ஸ் ஆக இருக்கும். சென்னையிலிருந்து நீங்கள் சேலம் அல்லது நாமக்கல் அடைய வேண்டும். அங்கிருந்து கொல்லி மலைக்கு ப்ரீபெய்டு டாக்ஸி மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் நீங்கள் கொல்லி மலையை எளிதில் அடையலாம். ரயிலில் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கி கொல்லி மலைக்கு செல்ல வேண்டும். பேருந்தில் சென்றால் அதிகபட்சம் ரூ.250 முதல் ரூ.300 வரை கட்டணம் செலுத்த வேண்டும். ரயிலில் இன்னமும் கம்மி தான்!
மலிவான தங்குமிடம் புக் செய்வது எப்படி
மலைக்கு மேல் தங்குமிடங்கள் எதுவும் கிடையாது. ஆனால் கொல்லிமலையை எளிதில் அணுகக்கூடிய தூரத்தில் பல மலிவான தங்குமிடங்கள் உள்ளன. நல்லதம்பி ரெசார்ட், பிளாக் பெப்பர் ரெசார்ட், கண்ணா கார்டன்ஸ், சானு இன்டர்நேஷனல், தீப்ரான்ட் கோல்டன் பேலஸ், AT அபார்ட்மெண்ட்ஸ், ஹோட்டல் ஸ்ரீ சரவண பவன் ஆகியவை கொல்லி மலைக்கு அருகில் உள்ள சில மலிவான பாதுகாப்பான தங்குமிடங்களாகும்.

கொல்லி மலையில் எத்தனை நாட்கள் தங்க வேண்டும்
கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை பட்ஜெட்டில் சுற்றி பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் கொல்லிமலைக்கு இரண்டு நாட்கள் செலவு செய்தால் போதும். எடுத்துக்காட்டாக நீங்கள் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து கொல்லிமலைக்கு கிளம்பினால் சனி மற்றும் ஞாயிறு அங்கு தங்கிவிட்டு, ஞாயிறு இரவு அங்கிருந்து கிளம்பினால் திங்கள் காலை சென்னையை அடைந்து விடலாம்.
கொல்லிமலையில் நாம் என்னவெல்லாம் செய்யலாம்
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ட்ரெக்கிங்
கிழக்குத் தொடர்ச்சி மலையின் குறிப்பிடத்தக்க பகுதி மற்றும் புகழ்பெற்ற கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அல்லது கொல்லிமலை நீர்வீழ்ச்சி, 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை பார்ப்பதற்கு சற்றே சிலிர்ப்பாக இருக்கிறது. நீர்வீழ்ச்சியை அடைய, அடிவாரத்திற்கு கீழே இறங்கும் சுமார் 1000 படிகளை கடக்க வேண்டும், மேலும் இது மலையேறுபவர்களிடையே மிகவும் பிரபலமானது.

வாசலூர்பட்டி படகு இல்லம்
வாசலூர்பட்டி நகர மையத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த படகு இல்லம் கொல்லிமலையில் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்றான செயற்கை ஏரியில் கட்டப்பட்டுள்ளது. அமைதியான ஏரியானது மலைகளின் துடிப்பான பசுமையான நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது, இது கொல்லிமலையில் ஒரு ரம்மியமான அனுபவத்தை வழங்குகிறது.
சித்தர் குகைகளை ஆராயுங்கள்
நீங்கள் கொல்லிமலையில் இருக்கும் போது, நீங்கள் நிச்சயமாக பல அழகான இடங்களை ஆராய விரும்புவீர்கள், மேலும் அனைத்து சித்தர் குகைகளிலும் சுற்றித் திரிவதற்கான அற்புதமான இடங்களில் ஒன்றாகும். ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே குகைக்குள் நுழைய முடியும், மேலும் சித்தர் குகைகள் எல்லாப் பக்கங்களிலும் மருத்துவ மூலிகைகளால் சூழப்பட்டுள்ளது என்றும் கொல்லிமலையின் சிறப்பு என்றும் நம்பப்படுகிறது.

தாவரவியல் பூங்கா
இது செம்மேடுவில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. கொல்லிமலையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் தாவரவியல் ஒன்றாகும். இது ஒரு அழகான ரோஜா தோட்டம், சூழல் நட்பு குடிசைகள், மற்றும் ஒரு கம்பீரமான பார்வை மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.
டாம்கோல் மருத்துவப் பண்ணை
மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் அதிகம் உள்ள இடமாக இந்த இடம் மிகவும் பிரபலமானது. சுற்றித் திரிவதற்கும் இது ஒரு அழகான இடம். நீங்கள் பயணப் பிரியராக இருந்தால், நிச்சயமாக அந்தப் பகுதியைச் சுற்றித் திரிய விரும்புவீர்கள்.
நாங்கள் மேற்கூறியது போல நீங்கள் செய்தால், குறிப்பாக 4 அல்லது 5 நண்பர்களாக சென்றால் நிச்சயம் ஒரு நபருக்கு ரூ.4000 மேல் தாண்டாது! நீங்கள் கொல்லிமலைக்கு செல்ல தயாரா?



Click it and Unblock the Notifications





