இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பரப்பரப்பான நகரம் தான் பெங்களூரு. விவி.புரம் தெரு கடையில் உணவை சாப்பிட்டு, வணிக தெருவில் ஷாப்பிங்க் செய்து, எம்.ஜி.சாலையில் பார்டி என, மாலில் சினிமா பார்த்து அல்லது நீண்ட தூரம் நடைப்பயணமென லால்பாக் தோட்டத்தில் சில பல செயல்களை செய்வது வார விடுமுறையில் பலரது மனதை புத்துணர்ச்சிக்கொள்ள செய்கிறது.
இருப்பினும், மூலை முடுக்கில் காணப்படும் பல இடங்களுக்கு ஒவ்வொருவரும் விடுமுறையின் போது சென்று வருவது மேலும் குறும்புத்தனத்தை விடுமுறையில் புகுத்தி, மனதையும் திருப்தி அடைய செய்யும். அனைத்து பிரசித்திபெற்ற இடங்களும் வழக்கமாக கூட்டமாக வார விடுமுறையின்போது காணப்பட, தனிமையில் இருப்பது வேடிக்கையை தடுக்கிறது. நானும் வார விடுமுறையின்போது இதே உணர்வுடனே காணப்படுகிறேன்.
கொம்மகட்டா ஏரி
பெங்களூருக்கு கொஞ்சம் தூரத்தில் காணப்படும் விளிம்பின் அருகில் வசித்துவர, தனித்துவமிக்க சலுகைகளையும், குறைகளையும் தருகிறது. பெங்களூருவின் முடிவில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் சலுகைகள் கிடைத்திட, மெச்சின்பெலே அணை, சுஞ்சி நீர்வீழ்ச்சி, மற்றும் பிற தள்ளி காணப்படும் இடங்களுக்கும் தப்பித்து செல்கிறோம். ஜிபியில், இதனை ஒத்த அழகிய சிறிய இடங்களுக்கு நான் தப்பித்து சென்றிருக்கிறேன்.
பெங்களூரில் சிறிய மற்றும் அழகிய ஏரிகள் காணப்படுகிறது. இந்த ஏரிகள், ஹெப்பல், பெல்லந்தூர், அல்சூர், என பெயர்பெற்ற நகரங்களில் காணப்படும் ஏரிகள் போல் இருக்கிறது. ஆனால், இந்த நாட்களில் பெங்களூரில் ஏரியை கண்டுபிடிப்பது கடினமாக இருந்திட, மோசமான மாசு நிலையுடனும் காணப்படுவதில்லை. இருப்பினும், கொம்மகட்டா ஏரியானது அழகிய விடுமுறை இலக்காக அமைந்திட, கெங்கேரியில் இது காணப்படுவதோடு, நைஸ் (NICE) சாலைக்கு வலதுப்புறம் அருகில் காணப்படுகிறது.
PC: Srushti
மரங்களும் மற்றும் தோட்டங்களும்
இவ்விடம் அமைதியான, அழகிய காட்சிகளை ஏரியில் தந்து, நல்லதோர் முறையில் பராமரிக்கப்பட்ட பாதையையும் கொண்டிருப்பதோடு, அமர்வதற்கான இடங்களும் ஆங்காங்கே காணப்பட, ஒரு பூங்காவும், மரங்களும் மற்றும் தோட்டங்களும் காணப்படுகிறது. ஏரியின் நடுவில், பச்சை வண்ணம் கொண்டு போர்த்தப்பட்ட மரங்கள் காணப்பட, அவை பல வகையான பறவைகளால் மனதினை ஈர்த்து, மாலை நேரத்து அழகிய காட்சியையும் மனதில் தருகிறது.
உண்மையாக, ஏரியானது பறவைகளை பார்க்க சிறந்து காணப்பட, அவற்றுள் கூழைக்கடா பறவை, வாத்துகள், பாயா நெசவாளர்கள் பறவை, இரவு ஹீரோக்கள் என பல பெயர் சொல்லும் பறவைகளும் அடங்கும். நீங்கள் சற்று பின்னே அமர்ந்து, இந்த பறவைகளை பார்ப்பதோடு, தூய்மையான தண்ணீர் முழுவதிலும் நீந்தியும் மகிழலாம். இருப்பினும், இவ்விடம் பெங்களூருவிற்கும் தொலைவில் காணப்பட, பலரால் இந்த இடத்தை கண்டுபிடிப்பதென்பது கடினமாகவே இருக்கிறது.
PC: Srusti
மெல்லிய நீர்வீழ்ச்சி
இந்த ஏரியை நான் பார்க்க, இந்த வழியாக நான் உலா வர தொடங்கியதோடு, இந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தபடி 2 மணி நேரத்தை கழித்தேன். நீங்கள் ஒரு சில சிறிய நீர் நிலையை கண்டுபிடித்திட, அவை ஏரியுடன் இணைந்தும் நல்ல முறையில் காணப்படுகிறது. தண்ணீரில் இருந்து தன் தலையை மெல்ல தூக்கி பார்க்கும் பாம்பை நான் கவனித்திட, அது பூச்சியினை பிடிக்கும் நோக்கத்துடனும் இருந்தது.
பூங்காவை சுற்றி நல்லதோர் நிலையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்க, இங்கே அமர்வதற்கு ஏதுவாக அமைவதோடு, மேகத்தின் பின்னே காணும் கதிரவனின் அழகையும் நம்மால் ரசிக்க முடிகிறது. இந்த ஏரியை நாம் காண, பருவமழைக்காலத்தில் இங்கே வருவது சிறந்த யோசனையாக அமைந்து, மெல்லிய நீர்வீழ்ச்சியினால் இந்த ஏரியின் அழகையும் நம்மால் ரசிக்க முடிவதோடு, ஒட்டுமொத்த காட்சியையும் நம் மனமானது ரசிக்க தொடங்குகிறது.
PC: Forestowlet
போக்குவரத்து
இந்த ஏரியை நாம் அடைய, பெரும்பாலான பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகள் காணப்பட, 221வரிசை அல்லது 401M என பல பேருந்துகள் கெங்கேரிக்கு செல்கிறது. ஏரி சாலை அல்லது அதன் அருகாமையின் அழகிய பகுதிக்கு பேருந்துகள் செல்ல, சிக்கலற்று பயணம் செய்ய நம்மால் முடிகிறது. இந்த ஏரியின் அழகானது, முக்கிய சாலையின் அருகாமையில் காணப்பட, இந்த ஏரியானது ஒதுக்குப்புறமாக அமைந்து மனித நடமாட்டம் அற்றும் காணப்படுகிறது.
PC: Srushti