பெங்களூருவில் வாழும் ஒவ்வொருவரோ அல்லது மாறுதல் பாணியில் நகரத்தில் வாழ்க்கையை நகர்த்துபவரோ இவ்விடத்தை விட்டு விலக நினைத்தாலும் அவ்வப்போது வந்து செல்லவே ஆசைக்கொள்வர். இதன் கண்டுபிடிக்க இயலாத, அழகிய கால நிலையை, மக்களின் சூடான மனதை, என அனைத்தையும் நம்மால் எளிதாக கண்டுக்கொள்ள முடிய, இந்த நகரத்தின் வழக்கமான இனிமையானது சவுகரியமான நிலையில் அமையவும்கூடும். இந்த நகரமானது எண்ணற்ற மக்களை, பல்வேறு வித பின்புலத்துடன், கலாச்சாரத்துடன், பாரம்பரியத்துடன் சேர்த்தே கொண்டிருக்கிறது.
இந்த பெரும் காதலானது பெங்களூரு குடிமகனை விடாது விரும்பிட, இந்த நகரத்தில் வாழ்பவர்களே இதன் வருத்தத்தையும் புரிதலையும் உணர்வர். இருப்பினும், அனைவராலும் இங்கே தங்கிவிடவும் முடிவதில்லை. நீங்கள் குறுகிய காலத்திற்கு பெங்களூருவில் இருந்தால், அனைத்து வம்புகளையும் நகரத்தின் நால்புறமும் செய்ய ஆசைக்கொள்ளக்கூடும் என்பதால், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கான இவ்விடம் நம்மை வெகுவாக கவரக்கூடும்.
சாங்கி டாங்கியை சுற்றி ஒரு உலா வரலாம்:
காலை நடைப்பயணமாக நீங்கள் அந்த நாளை தொடர, அழகிய சாங்கி தொட்டியை சுற்றியும் வலம் வர, மல்லேஷ்வரத்தில் காணப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியும் இதுவே என சொல்லப்படுகிறது. நீங்கள் இந்த இடத்தை உற்று நோக்க, பெங்களூருவிலே பிடித்தமான இடங்களுள் ஒன்றாக அமைவதோடு, உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலையில் நாம் இங்கே வரவும் செய்திடலாம். இங்கே சில மணி நேரத்தை இயற்கையுடன் செலவிடுவதன் மூலம் சிற்றின்பத்தை வெளியேற்ற வாயிலாக நீங்கள் பெறவும்கூடும்.
எந்த தர்சினியிலாவது உந்தன் காலை உணவை உட்கொள்ளலாம்:
பெங்களூருவில் காணப்படும் விரைவுக்காலை உணவகமானது சிறிதாக காணப்பட, அதனை தான் வழக்கமாக தர்சினி என அழைக்கப்படுகிறது. மல்லேஷ்வரத்தை வரிசைக்கட்டி பல சிறந்த தர்சினிக்கள் அல்லது சிறு உணவகங்கள் காணப்பட, அதனால், உங்களுடைய புத்துணர்வு நடைப் பயணத்துக்கு பின்னர் நேராக இங்கே வந்திடலாம்.
இங்கே வருவதன் மூலம் இட்லி மற்றும் வடையை ருசிப்பார்ப்பதோடு, ப்ரெஷ்ஷான பில்டர் காபியும் அல்லது சுவையான ஒரு ப்ளேட் மசாலா தோசை என வித்தியாசமான தென்னிந்திய காலை உணவை சாப்பிட்டு புதுவித அனுபவத்தையும் வயிறு அளவிலும், மனதளவிலும் க(கொ)ண்டிடலாம்.
உங்களுடைய அறிவியல் ஆர்வத்தை தூண்டும் கோளரங்கம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு ஒரு அழகிய பயணம்:
ஜவஹர்லால் நேரு ம்யூஸியம் :
ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தை நாம் பார்க்க, இங்கே நம்மால் சூரிய செயல்முறையையும், என வான் வழியின் அனைத்தையும் கற்றுக்கொள்ள முடிகிறது. இங்கே காணப்படும் தினசரி காட்சிகளை தவறாமல் நீங்கள் காண அறிவுறுத்தப்பட, அக்காட்சிகளாக மதியம் 12.30 மணி முதல் மாலை 4.30 வரை காணப்படுகிறது.
3 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது விஷ்வேஷ்வராய அருங்காட்சியகமது, இங்கே நம்மால் பலவித காரையும், இயந்திரங்களையும், என்ஜின்களையும், கணித குறியீடு கொண்ட அறிவியல் திரையையும், உணர்வுகள் என பலவற்றையும் காண முடிகிறது. இந்த அருங்காட்சியகமானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கிறது.
கோடை அரண்மனையான திப்பு சுல்தான் அரண்மனைக்கு ஓர் உலா:
இந்தோ - இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக காணப்படுகிறது திப்பு சுல்தான் கோடைக்காலத்து அரண்மனை. இவ்விடமானது ஒட்டுமொத்தமாக தேக்கு மரங்களையும், அழகிய வடிவமைக்கப்பட்ட தூண்களையுமென கொண்டு மேல்மாடத்துடன் காணப்படுகிறது. இந்த பெயரை பரிந்துரை செய்வதற்கு ஏற்ப, திப்பு சுல்தான் ஆட்சியில் இது கட்டப்பட, கோடைக்காலத்து அரண்மனையாகவும் இது விளங்குகிறது. இவ்விடமானது காலை 8.30 மணி முதல், மாலை 5.30 வரை அனைத்து நாட்களிலும் திறந்தே காணப்படுகிறது.
பல்படி காட்சியகத்தில் படத்தை காணலாம்:
பெங்களூருவின் எண்ணற்ற ஷாப்பிங்க் மால்கள் காணப்பட, தினசரி பாணியில் பல திரைப்படங்கள் இங்கே திரையிடப்படுகிறது. பெங்களூருவாசிகளாக நாம் வாழ, எவ்விடம் கொண்டு திரைப்படம் காணாமல் நம் வாழ்க்கையானது முழுமையடையாமல் போக, தென்னிந்திய உணவுகளும், நம்மை பல்படியில் (Multiplex) வரிசைக்கட்டி வரவேற்கிறது.
லால் பாஹ்ஹில் நாம் ஒரு உலா வரலாம்:
சிவப்பு தோட்டமென இலக்கிய ரீதியாக அழைக்கப்படும் லால்பாஹ், நகரத்தின் புகழ்பெற்ற தாவரவியல் தோட்டத்தை கொண்டிருக்கிறது. இவ்விடமானது 1766ஆம் ஆண்டு தீட்டப்பட, ஹைதர் அலியினால் நியமிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாக அமைய, அவருடைய மகன் திப்பு சுல்தானால் அதன்பின்னர் முடிக்கவும் பட்டது. பல வித உயிரனங்களான அழகிய மற்றும் அற்புதமான மலர்களுக்கு வீடாக லால்பாஹ் விளங்க, வழக்கமாக இது நெகிழ செய்யும் மலர் கண்காட்சியையும் கொண்டிருக்கிறது.
பெங்களூருவின் தெருக்களில் உள்ள கடைகளுக்கு ஒரு ஷாப்பிங்க் பயணம்:
பல புகழ்பெற்ற தெருக்கடைகளை பெங்களூரு கொண்டிருக்க, அவை பிரிகாட் சாலை, வணிக தெரு, ஜெய நகர் நான்காவது ப்ளாக் என பலவும் அடங்க., எண்ணற்ற கடைகளையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. இங்கே மலிவான ஷாப்பிங்க் தெருக்கள் முதல் உயர் வகை ஆடை வரை என காணப்பட, இந்த பெங்களூரு தெருவில் அனைத்தையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. இங்கே நாம் இருக்க, எந்தவித தெரு உணவு மையங்களையும் தேர்ந்தெடுத்து சுவைமிக்க சாட்டையும் சாப்பிடலாம்.
பப்பிற்கு அல்லது சிறந்த சாப்பாட்டை சாப்பிடலாம்:
பெங்களூரு புகழ்பெற்று விளங்க, பப்பும் ஒரு காரணமாக அமைகிறது. அவ்விடங்களாக இந்திரா நகர், MG சாலை, பிரிகாட் சாலை, என பலவும் காணப்பட, பல பப்களை இவ்விடம் கொண்டிருக்க, இரவு நேரத்தில் நாம் நண்பருடன் இன்பமாக இருந்திடலாம். ஒழுங்கான பெங்களூருவில் இரவு வாழ்க்கை என்பது அந்த நாளை நமக்கு உல்லாசமாக முடித்திடவும்கூடும்.
பப் உங்களுடைய எண்ணமாக இல்லையெனில், இந்த நகரத்தில் பல உணவகங்கள் காணப்பட, தலை சிறந்த உணவுகளும் இங்கே கிடைக்க, பலவித உணவை நாம் பகிரவும் செய்கிறோம். UB நகரம் அல்லது லாவெல்லா சாலை என நம் நேரத்தை அற்புதமாக மாற்ற, சிறந்த அனுபவத்தை உணவின் மூலமாக நாம் கொண்டிடலாம்.