தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏன் தென்னிந்தியாவில் உள்ள குளிர்ந்த மலைப் பிரதேசங்களிலும் கூட வெயில் சுட்டெரிக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், வட இந்தியாவில் பனிப்பொழிவு வெளுத்து வாங்குகிறது!
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது. பனிமழை மற்றும் பனிக்காற்று ஆகியவை இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்பநிலை சரிவை தற்போது ஏற்படுத்தியுள்ளது!

தென்னிந்தியாவில் வெளுத்து வாங்கும் வெயில்
ஏப்ரல் தொடங்கி மே மாதம் முடியும் வரை தென் தீபகற்பத்தின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நிலைகள் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் கணித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும், சென்னை, கரூர், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 40 டிகிரிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அநாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்ப அலை
இந்த மாதம் தொடங்கி வரவிருக்கும் மாதம் வரை தென் தீபகற்பத்தின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நிலைகள் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை கணித்துள்ளது. வெப்ப அலை என்பது வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை இருக்கும் காலம். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வெப்பமான காலநிலைக்கான புதுப்பிக்கப்பட்ட பருவகாலக் கண்ணோட்டம் மற்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மாதாந்திரக் கண்ணோட்டம் IMD ஆல் வெளியிடப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு கடும் வெயில் தான்
வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழல் நிலவும் என்பதால், ஜூன் 5ம் தேதி வரை வெப்பநிலை எச்சரிக்கையை மண்டல வானிலை மையம் விடுத்துள்ளது. வடக்கு உள் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் சுமார் 39-41 செல்சியஸ் ஆகவும், உள் பகுதிகளில் சமவெளிகளில் 37-39 செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் 34-37 செல்சியஸ் ஆகவும் இருக்கலாம்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு
இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் - உயர்ந்த மலைகளில் அமைந்துள்ளதால் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் லேசான பனிப்பொழிவு மற்றும் இடைவிடாத மழையைப் பெற்றுள்ளன. அதிகாரப்பூர்வ கணிப்புகளின்படி, இன்றும் மாநிலங்களில் பனிமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவினால் 112 சாலைகள் மூடல்
இந்திய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கையை அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் மழை மற்றும் பனி பெய்து வருவதால் சுமார் 112 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 107 சாலைகள் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியில் உள்ளன. இதையடுத்து, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
இந்த மோசமான வானிலையின் போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் விழிப்புடன் இருக்குமாறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். செங்குத்தான சரிவுகள் ஆபத்தை விளைவிப்பதால், அதிலிருந்து விலகிச் செல்லுமாறு அனைவரையும் போலீசார் வலியுறுத்தினர்.

ஒரே நாட்டுக்குள் எத்தனை வித்தியாசமான வானிலைகள்
ஒரே நாட்டுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் பாருங்களேன்! தென்னிந்தியாவில் வெயில் சுட்டெரிக்கின்றது. வட இந்தியாவில் பனிப்பொழிவினால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதுவே நீங்கள் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சென்றால் மழை பெய்து கொண்டிருக்கும். என்ன வினோதம் பாருங்களேன்!



Click it and Unblock the Notifications






