வெறும் 6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் எங்க இருக்கு தெரியுமா?
பக்தர்கள் வழிபடுவதற்கு கடலே தானாக வழி விடும் அதிசய நிகழ்வுகள் நடக்கும் இடம் அது.
பக்தர்களுக்கு அருள்பாலிக்கு அற்புத சக்தி கொண்ட அதிசய சிவன் கோயில் எங்க இருக்குனு
தெரிஞ்சிக்கணுமா முழுசா படிங்க

கடலுக்குள் கோயில்
இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது பாதி நேரம் கடலினுள் முங்கியே காணப்படுகிறது.

கடற்கரையிலிருந்து தொலைவில்
இந்த கோயில் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே அமைந்துள்ளது.

பக்தர்கள் எப்படி செல்கிறார்கள்
கடலுக்குள்ளே இருந்தால் பக்தர்கள் எப்படி செல்வார்கள் என்பதுதானே உங்கள் சந்தேகம்?

அதிசயம் என்ன தெரியுமா?
இரவு பத்துமணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் இந்த கோயில் கடலுக்கு உள்ளே மறைந்திருக்கும்.

1 மணிக்கு பிறகு
மதியம் 1 மணிக்கு பிறகு கடல் மெல்ல மெல்ல உள்வாங்கி, கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

தரிசனம்
இந்த வழியாக நடந்து செல்லும் மக்கள், கடலுக்கு நடுவே இருக்கும் கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.

அரிய நிகழ்வு
அரிய நிகழ்வு என்றவுடன் ஏதோ வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று நடக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அன்றாடம் இந்த நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

கட்டியவர்கள் யார் தெரியுமா
இத்தனை அதிசயம் நிறைந்த கோயிலை கட்டியவர்கள் பாண்டவர்கள் என்று நம்பப்படுகிறது.

மகாபாரதப் போரில்
மகாபாரதப் போரில், பாண்டவர்கள் தங்கள் சகோதரர்களான கௌரவர்களையே கொன்றதான் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர்.

கடலுக்குள் சிவலிங்கம்
இந்த கடலுக்குள் ஐந்து சிவலிங்களை அமைத்து, அதைச் சுற்றி கோயிலையும் கட்டியுள்ளனர் பாண்டவர்கள்.

மிகப்பெரிய கோயில்
ஆரம்பகாலத்தில் இந்த கோயில் மிகப்பெரியதாக இருந்ததாகவும், இயற்கை சீற்றங்களினால், சிதிலமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் கொடி மரம் மட்டும் எந்த வித சேதமும் அடையவில்லை என்கிறார்கள்

எஞ்சியவை
இப்போது இந்த கோயிலில் ஒரு கொடி மரமும், சூலமும் உள்ளது.
மேலும் ஒரு பாறைக்குள் பாண்டவர்கள் உருவாக்குனதா நம்பப்படும், ஐந்து சிவலிங்கங்கள் அமைந்திருக்கிறது.

வழிபடும் நேரம்
பொதுவாகவே இப்பகுதி மக்கள் பகல் 2 மணியிலிருந்து, இரவு 8 மணிக்குள் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி விடுகிறார்கள். அதன்பின்னர் கடல் கோயிலை சூழ்ந்து கொள்கிறது.

அபாயம்
கடலுக்குள் 1 கிமீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் கோயிலுக்கு செல்வது என்பது மிகவும் அசாதாரணமான விசயம். ஆனாலும் இதை கண்டு மக்கள் பயம் கொள்வதில்லை.
இவ்வளவு அபாயம் இருந்தும் இன்றுவரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

எப்படி செல்லலாம்?
குஜராத் மாநிலம் கோலியாத், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில்.

அதிசயப் பெருமாள்
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும் வரதராஜப் பெருமாள்! எங்கே தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை
இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை... இது பற்றி தெரியுமா ?

இரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள்
இரும்பை தங்கமாக்கும் அதிசய சித்தர்கள் வாழும் கொல்லிமலை மர்மங்கள் தெரியுமா?



Click it and Unblock the Notifications




