சென்னையில் அடிக்கும் வெயிலைப் பார்த்தால் சற்று பயமாக தான் இருக்கிறது அல்லவா. கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து ஒரு பிரேக் எடுத்து ஜில்லுன்னு ஒரு இடத்துக்கு சென்று நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கொஞ்சம் நேரம் ஸ்பென்ட் பண்ணால் நல்லா இருக்குமே என்று யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம்! சென்னைக்கு அருகில், தண்ணீர் வரத்து இருக்கும் சில அருவிகளை பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக!
நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள்
சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நாகலாபுரம் நீர்வீழ்ச்சி ஒரு சின்ன ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழகான சூழலால் அலங்கரிக்கப்பட்டுள்ள நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறியதா ஒரு ட்ரெக்கிங் பண்ணினா போதும், அந்த அழகான ஸ்பாட்களில் நாம என்ஜாய் பண்ணலாம்.

தடா நீர்வீழ்ச்சி
சென்னைவாசிகள் பலரும் தடா நீர்வீழ்ச்சி பற்றி அறிந்திருப்பார்கள், கேள்விப்பட்டிருந்தாலும் பலர் சென்றிருக்க மாட்டர்கள். தடா நீர்வீழ்ச்சி உப்பலமுடுகு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதையா மண்டேலில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.
கைலாசகோணா நீர்வீழ்ச்சி
சென்னை நகருக்கு அருகில் உள்ள தூய்மையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நீர்வீழ்ச்சியைத் தேடுகிறீர்களா? பின்னர் நகரி மலைகளின் பள்ளத்தாக்குகளை நோக்கிச் செல்லுங்கள், அங்கு நீங்கள் குறிப்பிடத்தக்க கைலாசகோனா நீர்வீழ்ச்சிகளைக் காணலாம். 40 அடி உயரத்தில் இருந்து விழும் சுத்தமான நீர், பார்ப்பதற்கு ஒரு கவர்ச்சியான தளமாக அமைகிறது. இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பசுமையுடன் கூடிய அற்புதமான படங்களை நீங்கள் கிளிக் செய்யலாம். வேறு என்ன? சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய கோவிலை அடைய நீங்கள் சிறிது தூரம் நடக்க வேண்டும்.

தலகோனா நீர்வீழ்ச்சி
சென்னைக்கு அருகில் உள்ள சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்று தலகோனா. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் 270 அடி, ஆனால் இந்த இடத்தின் மிக அற்புதமான பகுதி இது வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவில் உள்ள நெரபைலு கிராமத்தில் அமைந்துள்ளது தான். எனவே நீங்கள் அதே இடத்தில் நீர்வீழ்ச்சிகளின் இந்த அழகிய காட்சியுடன் நாட்டின் அரிய வனவிலங்குகளையும் பார்த்து மகிழலாம். சென்னையில் இருந்து நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு நாள் ட்ரிப் செல்ல இந்த ஸ்பாட்டை நீங்கள் தயக்கமின்றி தேர்வு செய்யலாம்.

சதாசிவகோணா நீர்வீழ்ச்சி
அடர்ந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுவே இருந்து விழும் குளிர்ந்த நீர் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சதாசிவ கோனா அதன் நீர்வீழ்ச்சிகளுக்கு மட்டும் பிரபலம் இல்லை, இது ஒரு புனித மத ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. தாசிவ பகவான் (சிவபெருமானின் அவதாரம்) அவரது மனைவி காமாக்ஷியுடன் அருவிகளுக்கு அருகில் அமர்ந்து நமக்கு அருள் பாலிக்கின்றனர். மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் கார்த்திகை மாசத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தமிழகம் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
மேற்கூறிய இடங்கள் யாவும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஆர்பரித்து கொட்டுகின்ற அளவுக்கு நீர்வரத்துடன் காணப்படாது. ஆனால், நிச்சயம் சிறிதளவு நீர் வரத்து இருக்கும், அங்கே நீங்கள் குளிக்கலாம். அதே போல நீர்வீழ்ச்சிகளுக்கு கீழே உள்ள தண்ணீர் நிரம்பிய குளங்களிலும் நீங்கள் இறங்கி ஆட்டம் போடலாம்!



Click it and Unblock the Notifications





