படா மஹால் எனும் இந்த அரண்மனை மாளிகை 17ம் நூற்றாண்டில் ஆண்களுக்காக கட்டப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு ‘பெரிய அரண்மனை’ என்பது பொருளாகும். இது 90 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு இயற்கையான பாறை அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுற்றிலும் அழகிய பசும்புல்வெளிகளுடன் கூடிய தோட்டம், அற்புதமான மேற்கூரைத்தளங்கள், தூண்கள், பலகணிகள் மற்றும் நீரூற்றுகளை இந்த அரண்மனை கொண்டுள்ளது. இதனுள்ளே அமைந்துள்ள அறைகளில் அலங்காரக்கண்ணாடிகள், மரவேலைப்பாடுகள் மற்றும் ஓவியப்படங்கள் ஆகியன காணப்படுகின்றன.