சாஸ் - பஹு கோயில் விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள 10-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கோயிலாகும். இது உதய்பூரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை 8ல் நக்டா நகரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயில் இரண்டு அமைப்புகளைக் கொண்டது . அதில் ஒன்று ஒரு மாமியாரால் கட்டப்பட்டது;மற்றொன்று அவருடைய மருமகளால் கட்டப்பட்டதாகும்.
இந்த கோயிலின் நுழைவாயில் செதுக்கப்பட்ட வாசற்கால் மற்றும் பல அடுக்குகளைக்கொண்ட விதான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பூஜைப்பீடம், தூண்கள் மற்றும் அலங்கார சாரங்களுடன் கூடிய பிரார்த்தனை மண்டபம் மற்றும் வாசற்கூரை போன்ற பொதுவான அம்சங்களை இந்த கோயிலின் இரண்டு அமைப்புகளும் கொண்டுள்ளன.
சாஸ் கோயிலை விட சற்றே சிறியதாக காட்சியளிக்கும் பஹூ கோயில் எட்டு பெண் சிலைகளைக்கொண்ட எண்கோண மேற்கூரையைக் கொண்டுள்ளது. இந்த கோயிலுக்கு முன்புறம் ஒரு தோரண வாயிலும் காணப்படுகிறது.
இக்கோயிலின் சுவற்றில் ராமாயண காவியத்தின் பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டு அடுக்குகளாக வடிக்கப்பட்டுள்ள இந்த சிற்பங்கள் ஒன்று மற்றொன்றுடன் இணைந்திருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோரின் சிற்பங்கள் ஒரு மேடையில் வடிக்கப்பட்டுள்ளன. மற்றொரு மேடையில் ராமர், பலராமர் மற்றும் பரசுராமர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 10ம் நூற்றாண்டில் மஹாபலா மன்னரால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் விஷ்ணு பஹவானுக்கான சன்னதிகளை தொகுப்பாக கொண்டுள்ளது.