காப்பு அல்லது கௌப் என்று அழைக்கப்படும் இந்த அழகான சிறு நகரம் உடுப்பிக்கு அருகில் உள்ளது. இது ஒரு கடற்கரைப்பகுதியாகும். இங்குள்ள சிறப்பம்சங்களாக ஒரு கலங்கரை விளக்கமும் மாரிகாம்பா கோயிலும் உள்ளது.
பக்கத்து நகரங்களிலிருந்து மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் இந்த கோயில் பக்தர்களை ஈர்க்கின்றது.சிர்சி மார்காம்பா திருவிழா வருடந்தோறும் விமரிசையாக இந்த கோயிலில் கொண்டாடப்பட்டு அச்சமயம் பெருமளவில் பக்தர்கள் இங்கு கூடுகின்றனர்.
மாரிகாம்பா தேவியின் மிகப்பெரிய சிலை இந்தக் கோயிலில் காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் பெரிய கோயில்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.இங்குள்ள கலங்கரை விளக்கம் 1901ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்கும் இது அடித்தளத்திலிருந்து 27.12 மீட்டர் உயரத்தினை கொண்டுள்ளது. இது மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.
இதன் மேலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் தெரியும் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.காப்பு குண்டப்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. NH 17 ல் உடுப்பியிலிருந்து மங்களூர் நோக்கி பயணம் செய்யும் வழியில் இந்த சிறு நகரத்தினை அடையலாம்.