வான்கனேர் என்ற பெயர் அதன் இடம் சார்ந்து உருவான பெயராகும். அதாவது மச்சு நதி தண்ணீர் (னேர்) ஓடும் ஒரு வளைவில் (வான்க) இந்த இடம் இருப்பதால் இப்பெயரை அடைந்தது. வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட இடமான வான்கனேர், ஜாலா ராஜ்புட்களால் ஆட்சி செய்யப்பட்டதால் அதனை ஜாலாவர் என்றும் அழைப்பார்கள்.
மஹாராணா அமர்சிங்ஜி அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் வான்கனேர் ஒரு ஒழுங்கமையை பெற்றது. அமர்சிங்ஜி கலைகள் மற்றும் கட்டடக் கலைகளின் ஆதரவாளராக இருந்தார்.
தற்போதைய அரச குடும்பம் வசிக்கும் ரஞ்சித் விலாஸ் அரண்மனை எச்.எச்.அமர்சிங்ஜியால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை பல வகையான கட்டடக் கலையின் கலவையாக இருக்கிறது.
கோதிக் வளைவுகள், பளிங்கு கர்களிலான மேல் மாடிகள், முகாலய குவிமாட வடிவில் கடிகார கோபுரம், பிரான்கோ-இத்தாலிய ஜன்னல் கம்பிகள் போன்றவைகள் தான் உலகத்தில் உள்ள பல கட்டடக் கலையின் கலவையாக இது விளங்குவதற்கான எடுத்துக்காட்டு.
இந்த அரண்மனையில் வலிமை மிக்க பல வாகன தொகுப்புகளை காணலாம். மகாராஜாவின் கோடை அரண்மனையாக விளங்கியது ராயல் ஓயாசிஸ். மச்சு ஏரியின் அருகில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் உள்ளரங்க குளம் ஒன்று ஆர்ட் டெகோ ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளது.
ராயல் ரெசிடென்சி மற்றும் ராயல் ஓயாசிஸ் ஆகிய இரண்டையுமே ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றி விட்டது குஜராத் அரசாங்கம். வான்கனேரில் உள்ள கட்டடக் கலைகள் அனைத்தையும் ராஜ செழுமையை பிரதிபலிப்பதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications