முகலாய மன்னர்களிலேயே மிகச்சிறந்த கலாரசிகராகவும் கட்டிடக்கலை ஆர்வலராகவும் விளங்கிய ஷாஜஹான் மன்னரால் இந்த மோத்தி மஸ்ஜித் மசூதி கட்டப்பட்டிருக்கிறது.
ஒரு பிரம்மாண்ட முத்துக்கல் போன்று இந்த மசூதி ஒளிர்வதால் இதற்கு முத்து மசூதி எனும் பொருளைத்தரும் ‘மோதி மசூதி’ என்ற பெயர் வந்துள்ளது.
ராஜ சபையினரின் பிரத்யேக பயன்பட்டிற்காக இந்த மசூதி ஆக்ரா கோட்டை வளாகத்திற்குள் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மசூதியின் உள் முற்றம் இருபுறமும் நீண்ட தாழ்வாரங்கள் மற்றும் விதான வளைவுகளோடு கூடிய சிற்றறை அமைப்புகளை கொண்டுள்ளது.
இம்மசூதியின் கூரைப்பகுதி வெண் பளிங்குக்கற்களாலான மூன்று குமிழ் மாடக்கோபுரங்களை கொண்டுள்ளது. இதன் சுவர்கள் சிவப்பு மணற்பாறைகளால் கட்டப்பட்டு மினுமினுப்புடன் ஜொலிக்கின்றன. பெரும்பாலும் இந்த மசூதி முழுக்கவும் வெண்பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
நுணுக்கமான சமச்சீர் அமைப்போடு நவீன கட்டிடக்கலை அம்சங்களே தோற்கும் அளவுக்கு இந்த மசூதி மிக துல்லியமான தொழில்நுட்ப வடிவமைப்புடன் அப்பழுக்கற்று காட்சியளிக்கிறது. ஆக்ரா நகர மையத்திற்கு அருகில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மசூதி அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்றுச்சின்னமாகும்.