கிறித்துவ ஆன்மீக யாத்ரீகர்கள் மத்தியில் இந்த ‘செயிண்ட் செபாஸ்டியன் சர்ச்’ மிக பிரசித்தமான தேவாலயமாக அறியப்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் செயிண்ட் செபாஸ்டியன் எனும் மதகுரு இதைக்கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அவர் கட்டிய ஏழு தேவாலயங்களில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் புகழ்பெற்றுள்ளது.
இந்த தேவாலயத்தில் ‘அர்த்துண்கல் பெருநாள்’ எனும் கோயில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. (அர்த்துண்கல் என்பது இந்த ஊரின் பெயர்; பெருநாள் என்றால் விருந்து என்பது பொருள்) செயிண்ட் செபாஸ்டியன் நினைவாக இந்த பத்து நாள் திருவிழாவானது அனுஷ்டிக்கப்படுகிறது.
பாரம்பரிய வழக்கப்படி சில பக்தர்கள் கடற்கரையிலிருந்து தரையில் தவழ்ந்தே வந்து செயிண்ட் செபாஸ்டியனை ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டபிறகு இந்த திருவிழா துவங்குகிறது.
இந்த திருவிழாவின் போது தவறாமல் தேவாலயப்பகுதியில் வட்டமிடும் ஒரு பருந்தின் பிரசன்னமானது தெய்வ அருளாக பக்தர்கள் மத்தியில் தரிசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் இந்த தேவாலய திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆலெப்பி நகரத்திலிருந்து 23 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கிறித்துவ ஆன்மீக ஸ்தலத்துக்கு நல்ல போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications