குருத்வாரா கூனி சாஹிப் எனும் இந்த வழிபாட்டுத்தலம் குரு கோவிந்த் சிங் தனது படை வீரர்களுடன் ஒரு வார காலம் ஓய்வெடுத்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது. முற்காலத்தில் இது பாகீச்சா சாஹிப் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
தேராதூன் நகரத்திலிருந்து இடம் பெயர்ந்து தன் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த மாதா ராஜ் கௌர் என்பவரை தரிசிப்பதற்காக இந்த இடத்திற்கு குரு கோவிந்த் சிங் விஜயம் செய்ததாக சொல்லப்படுகிறது.
சண்டிகர் – மானசா தேவி சாலையில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது. அவ்வளவாக பிரபல்யமடையாவிட்டாலும் இந்த குருத்வாரா விஜயம் செய்ய வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.