புருடே என்ற சொல் கன்னடத்தில் மண்டையோட்டை குறிக்கின்றது. சித்தாபூரிலிருந்து கம்டா செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. குளிர்காலம் மற்றும் கோடை கால துவக்கத்தில் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்கசெல்வது சிறந்தது. எனேனில் மழைக்காலத்தில் இடைப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியை தாண்டி இந்த நீர்விழ்ச்சியை அடைவது மிகக்கடினம்.
கோடைக்காலத்தில் ஒரு ஓடையின் வழியாக மலையேறி இந்த நீர்வீழ்ச்சியை காணலாம். நீர் வீழ்ச்சியின் மறு புறத்தை அடைவது மிகச்சிரமமானதும் அபாயமானதும் ஆகும்.
இந்த நீர்வீழ்ச்சியின் முன் நின்று பார்த்தால் சுற்றிலும் மலைகளும் இயற்கையும் உயர்ந்தோங்கி நின்று ஒரு பிரம்மாண்ட திறந்தவெளி ஆம்பிதியேட்டர் முன்பு நிற்பது போன்ற உணர்வை இப்பிரதேசம் தருகிறது. இந்த இடத்தில் பயணிகள் (மலை ஏறிகள்) அமர்ந்து அருவியின் சப்தத்தையும் நீரின் சாரலையும் அனுபவித்து மகிழலாம்.