கட்டாக் சுற்றுவட்டாரத்தில் உள்ள இக்கோவில் சண்டி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகாநதி கரையில் உள்ள இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
அஸ்சின கிரிஷ்ணா அஸ்டமி துவங்கி விஜயதசமி வரை 16 நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும் துர்கா பூஜையின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். 300ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்தக் கோவிலின் கட்டிட அமைப்பும் பிரம்மிக்க வைப்பதாக இருக்கிறது.