குருவாயூரப்பன் கோயிலுக்கு அருகிலேயே வீற்றிருக்கும் பெருமையுடன் இந்த சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ளது. துர்க்காதேவியின் அவதாரமான சாமுண்டீஸ்வரி அம்மன் இந்தக் கோயிலில் வீற்றுள்ளார்.
இந்த கோயில் வளாகத்துக்குள்ளேயே தாழத்துக்காவு பகவதி அம்மனுக்காகவும் ஒரு சன்னதி காணப்படுகிறது. ஒரு கற்பாறை வடிவில் இந்த சன்னதியின் அம்மனை தரிசிக்கலாம்.
புராதனமான கோயிலான சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விஜயம் செய்து வழிபடுகின்றனர். குருவாயூரப்பன் கோயிலுக்கு வருகை தரும் எல்லா பக்தர்களுமே இந்த சாமுண்டீஸ்வரி கோயிலையும் தரிசிப்பது வழக்கமாக உள்ளது.
குருவாயூரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த சாமுண்டீஸ்வரி கோயில் தியானத்துக்கும் ஆன்மீக வேண்டுதலுக்கும் ஏற்ற தெய்வீக ஸ்தலமாகும்.