ஹரித்வாரின் இருக்கும் ஹர்-கி-பெளரி புகழ்பெற்ற புனிதனாம பிரம்ம குண்டமாக திகழ்கிறது. மலைகளில் இருந்து விழும் கங்கை இந்த இடத்திலிருந்து சமநிலைப்பகுதிகளுக்கு பாய்கிறது. இந்த இடத்தில் தியானம் செய்த தன் தம்பி ப்ரிதாரியின் நினைவாக மன்னர் விக்கிரமாதித்யர் இந்த பிரம்மகுண்டத்தை கட்டியதாக சொல்லப்படுகிறது.
புராணத்தின் படி இந்து கடவுள்களான சிவனும், விஷ்ணுவும் வேதகாலத்தில் இவ்விடத்திற்கு வருகை தந்ததாக சொல்லப்படுகிறது. மற்றொரு புராணக் கூற்றின்படி ஆக்கும் கடவுளான பிரம்மா இங்கு 'யக்னா' என்ற யாகத்தை வளர்த்ததாகச் சொல்கிறார்கள். கங்கை சங்கமம் ஆகும் இடத்தில் காணப்படும் காலடித்தடங்கள் மகாவிஷ்ணுவினுடையது என்ற பேச்சும் நிலவுகிறது.
ஹர்-கி.பெளரியில் குளிப்பது பாவங்களைப் போக்குவவதாக பயணிகள் நம்புகிறார்கள். முடி காண்டிக்கை செலுத்தவும், இறந்தவர்களின் அஸ்தியைக் கரைக்கவும் இங்கு பக்தர்கள் குழுமுகிறார்கள்.
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவைக் காண உலகெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.



Click it and Unblock the Notifications