ஷிமோகா மாவட்டத்தில் சாகரா நகரத்துக்கு அருகிலேயே இந்த கேலடி என்னும் கோயில் நகரம் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்துக்காகவும் ஒரு புராதன சிவன் கோயிலுக்காகவும் இந்த கோயில் புகழ் பெற்றுள்ளது.
வட கர்நாடகாவில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள் அவசியம் விஜயம் செய்யவேண்டிய ஸ்தலமான இது இயற்கை எழில் மற்றும் ஆன்மீக யாத்திரை அம்சங்களை கொண்டுள்ளது.இந்த கேலடி நகரத்தில் வீரபத்ரர், பார்வதி மற்றும் ராமேஷ்வரர் கோயில்கள் பிரசித்தமாக அமைந்துள்ளன.
இந்த கோயில்கள் பயணிகளை வரலாற்றுக்காலத்துக்கு அழைத்துச்சென்று அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட கேலடி நாயக்கர்கள் மற்றும் இதர மன்னர்களின் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துகின்றன. திராவிட மற்றும் ஹொய்சள கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கேலடி அருங்காட்சியகத்தில் சில பழைய குறிப்பேடுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவை கேலடி ராஜவம்ச காலத்தை சேர்ந்தவையாக அறியப்பட்டுள்ளன. மேலும் வரலாற்றுக்காலத்தை சேர்ந்த சில செப்பேடுகள், நாணயங்கள், பனை ஓலைச்சுவடிகள் போன்ற அரும்பொருட்கள் நாயக்கர் காலத்து அடையாளங்களாக இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.