ஹொன்னேமரடு பிரதேசத்தில் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு அருகில் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான ஷிமோகா மாவட்டத்தில் இந்த சாகரா நகரம் அமைந்துள்ளது. வரலாற்றுத்தலங்களான இக்கேரி மற்றும் கேலடி போன்றவற்றுக்கு வெகு அருகிலேயே இது உள்ளது.
இங்கு கேலடி ராஜவம்சத்தைச் சேர்ந்த சதாசிவ நாயக்கரால் கட்டப்பட்ட சதாசிவ சாகரா எனும் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தற்சமயம் கணபதி கேரே என்று அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் இங்குள்ள மாரிகாம்பா கோயில் மற்றும் மஹாகணபதி கோயிலுக்காக பக்தர்களிடையே பிரசித்தமாக விளங்குகிறது. வரதா ஆறு உற்பத்தியாகும் வரதாமூலா எனும் இடத்திற்கு அருகில் இந்த நகரம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நகரம் நாலாபுறமும் நீர்நிலை, கானகம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் அம்சங்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் வரதா ஆற்றில் காணப்படும் நீர் ஊற்றுகள் இயற்கை ஆர்வலர்களை பெரிதும் கவரும் அம்சமாகவும் உள்ளது.