அஜய்கர் கோட்டை கஜுராஹோ நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. விந்திய மலைத்தொடரில் ஒரு தனித்து வீற்றிருக்கும் ஒரு மலையின் உச்சியில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது.
குடிமக்களை எதிரிகளின் தாக்குதல் மற்றும் முற்றுகைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக சந்தேள வம்ச மன்னர்கள் இக்கோட்டையை கட்டியுள்ளனர். அஜய்கர் கோட்டையிலிருந்து மலையுச்சிக்கு கீழே ஓடும் கேன் ஆற்றின் அழகை நன்றாக பார்த்து ரசிக்க முடியும்.
இந்த கோட்டைக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. வடபகுதியில் உள்ள தர்வாஸா நுழைவாயில் மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள தர்ஹாவ்னி நுழைவாயில் என்பவையே அவை.
பல்வேறு அழகிய சிற்ப வடிவங்கள் மற்றும் அஷ்ட சக்தி தெய்வத்தின் சிலைகள் ஆகியவற்றை இந்த கோட்டை வளாகத்தில் பார்க்கலாம். கோட்டை ஒட்டியவாற அஜய் பால் கா தலாவ் எனும் அழகிய ஏரியும் அமைந்துள்ளது.
பார்வையாளர்கள் வெகுவாக இந்த ஏரிப்பகுதியின் வனப்பால் கவரப்படுகின்றனர். கோட்டைக்குள்ளே ஒரு ஜைன கோயிலும் அமைந்திருக்கிறது. இது தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த ஜைனக்கோயில் வெகு பிரசித்தமாக அறியப்பட்டிருக்கிறது.
அஜய்கர் கோட்டை ஸ்தலத்தில் நாம் கழிக்கும் ஒவ்வொரு கணமும் வேறொரு யுகத்துக்குள் நுழைந்த விட்டது போன்றது பிரமையையும் மயக்கத்தையும் அளிக்கின்றன. இந்த உணர்வை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். ஒரு குளிர்கால காலைப்பொழுதை இந்த ஸ்தலத்தில் அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும்.



Click it and Unblock the Notifications