ஜான்சி – கஜுராஹோ நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஏரியின் கரைப்பகுதியில் இந்த துபேலா மியூசியம் அமைந்திருக்கிறது. ஒரு புராதன கோட்டையின் உள்ளே இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
புராதன மற்றும் நவீன காலத்தை சேர்ந்த பல்வேறு அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கஜுராஹோ பகுதியை ஆண்ட புந்தேள வம்சத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி குறித்த ஏராளமான காட்சிச்சான்றுகள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சிற்பங்களும் அரும்பொருட்களும்தான் புந்தேள ஆட்சியின் உன்னத காலத்தை நமக்கு எடுத்துரைக்கும் சான்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சக்தி வழிப்பாடு வழக்கத்தில் இருந்ததை குறிக்கும் ஏராளமான சிற்பங்களையும் இங்கு காணலாம்.
மேலும், புந்தேள அரசர்கள் பயன்படுத்திய வாட்கள், தோற்ற சித்திரங்கள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு சாம்ராஜ்ஜியத்தின் பொற்காலத்தை கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் வீற்றிருக்கும் கோயில்கள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சான்றுகளின் மூலமாகவும் பார்வையாளர்கள் கண்கூடாக தெரிந்துகொள்ள முடியும்.
எனவே இந்த அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்யாமல் கஜுராஹோ சுற்றுலாவை முடிக்கக்கூடாது என்பது அவசியம் பின்பற்ற வேண்டிய எழுதப்படாத விதிமுறையாகும்.
ஏனெனில் இங்குதான் புந்தேள வம்சம் குறித்த தகவல் சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்களது நாகரீகம் மற்றும் படைப்புகள் குறித்த ஏராளமான தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன.