துல்ஹாதேவ் கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தின் தென் தொகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஒன்றாகும். இது சந்தேள வம்ச மன்னர்களால் 1130ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
அவர்கள் காலத்திய தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த கோயில் ஐந்து சிறிய அறைகள் மற்றும் ஒரு மண்டபம் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
துல்ஹாதேவ் கோயில் சிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. எனவே இங்கு சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் அதிகமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலின் மையப்பகுதியில் ஒரு அழகிய சிவலிங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் மையப்பகுதியில் நுணுக்கமான விரிவான சிற்ப வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.
முன்பே சொன்னதுபோல் வேறெந்த கோயில் போன்றும் அல்லாது தனித்தன்மையான கட்டமைப்புக்கூறுகளுடன் இது எழுப்பப்பட்டிருப்பதை கண்கூடாகக்காணலாம்.
பீடத்தில் வைத்த ஆபரணம் போன்று பார்க்க பார்க்க திகட்டாத கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும் இந்த கோயில் வரலாற்று ஆர்வலர்களும் கலாரசிகர்களும் அவசியம் தரிசிக்க வேண்டிய உன்னதப்படைப்பாகும்.