சிமிரி ஆறும் கென் ஆறும் ஒன்று சேரும் இடத்தில் இந்த கங்காவ் அணை அமைந்திருக்கிறது. பன்னா தேசிய பூங்கா மற்றும் கங்கு சராணாலயம் போன்ற இயற்கை வனப்பகுதிகள் இந்த அணைப்பகுதியை சூழ்ந்துள்ளன.
குளிர்காலத்தில் பல்வகையான புலம்பெயர் பறவைகள் இந்த அணைப்பகுதிக்கு விஜயம் செய்யும்போது இப்பகுதி மேலும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் இந்த அணைப்பகுதியின் அழகை ரசிக்க திரள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை ஆர்வலர்கள், சாகசப்பிரியர்கள் மற்றும் மீன்பிடி ரசிகர்கள் போன்றோரை கவர்ந்து இழுக்கும் ஒரு சுற்றுலாத்தலமாக இந்த கங்காவ் அணை பிரசித்தி பெற்றுள்ளது. கென் ஆற்றில் ஓடும் நீரை தேக்கி பயன்படுத்தும் வகையில் இந்த அணை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு படகுச்சவாரி மற்றும் மீன்பிடிப்பு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம். வார இறுதி நாட்களில் நீர்த்தேக்கத்தின் அழகு மற்றும் இயற்கை எழில் போன்ற அம்சங்களை ரசித்தபடி விடுமுறை சுற்றுலாவை கழிக்கும் பயணிகளை இங்கு காணமுடியும்.