ஷாந்திநாத் கோயில் எனப்படும் இந்த ஜைனக்கோயில் கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தின் கிழக்குத்தொகுதியில் உள்ள ஒரு பிரசித்தமான கோயிலாகும். கஜுராஹோவிலுள்ள ஏனைய புராதனக்கோயில்களைப்போன்றே இது காட்சியளித்தாலும் இது புதிதாக கட்டப்பட்ட கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜைன வகுப்பை சேர்ந்த மக்களின் முக்கியமான யாத்திரைஸ்தலமாக இந்த கோயில் புகழ் பெற்றுள்ளது. கோயிலின் உள்ளே வீற்றிருக்கும் பிரதான சிலையானது நின்ற கோலத்தில் நான்கரை அடி உயரத்தில் காணப்படுகிறது.
இந்த சிலை 1028ம் வருடத்தை சேர்ந்ததாகும். ஒரு பீடத்தின் மீது வீற்றுள்ள எருது சிலை இந்த கோயிலின் நுழைவாயிலில் பார்வையாளர்களை வரவேற்கும் வண்ணம் காட்சியளிக்கிறது.
கோயிலின் உள்ளே பல ஜைன தீர்த்தங்கரர்களின் சிலைகள் காணப்படுகின்றன. கஜுராஹோவுக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள தர்மஷாலாவில் யாத்ரீகர்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றது.