திருவல்லம் பரசுராமஸ்வாமி கோயில் கோவளத்துக்கு அருகில் கரமனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கேரளவில் பரசுராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும். திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் கோவளம் நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
கேரளா எனும் நிலப்பகுதியை உருவாக்கியதாக சொல்லப்படும் பரசுராம பஹவானுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் பக்தியுடன் பூஜிக்கப்படும் இந்த கோயிலுக்கு ஏராளமான எண்ணிக்கையில் ஆன்மீக யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
12ம் நூற்றாண்டு அல்லது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படும் இந்த புராதன கோயில் தற்போது கேரள தொல்லியல் துறையில் பராமரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்விக்கப்படும் ‘பலிதர்ப்பமன்’ எனும் சடங்கை செய்வதற்காகவும் மக்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். ‘கார்க்கிடக வாவு’ எனும் நாளின்போது கரமனா ஆற்றில் புனித நீராடியபின் இந்த சடங்கு செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications