குருக்ஷேத்ராவில் இயற்கைச்சூழலை ரசித்து மகிழ ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இவற்றில் ஓ.பி. ஜிண்டால் பார்க் முக்கியமான ஒன்றாகும். இதனுள்ளே பெரிய இசை நீரூற்று ஒன்றும் அமைந்துள்ளது. ஹரியானாவின் மின் துறை அமைச்சராக இருந்த ஓ .பி. ஜிண்டால் பெயரில் இந்த பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கேற்ற வண்ணமயமான ஊஞ்சல்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுப்பகுதி, பிக்னிக் பகுதி, முதியோர்களுக்கான வளாகம், வனவிலங்கு காட்சிக்கூடம், தியானப்பூங்கா, ஓட்டப்பயிற்சி பாதை மற்றும் ரோஜாத்தோட்டம் போன்ற ஏராளமான அம்சங்களை இந்த பூங்கா வளாகம் கொண்டுள்ளது.
இரவு நேரங்களில் இந்த இசை நீரூற்று ஒளியூட்டப்பட்டு இயக்கப்படுகிறது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் எல்லா வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பியுள்ளன.



Click it and Unblock the Notifications