தோள் கொடுக்கு(விஞ்சு கட்டா) போன்ற வடிவத்தினை கொண்டிருப்பதால் இப்படி அழைக்கப்படும் இந்த ஸ்தலமானது மலைக்கு வெளியில் வளைந்து நீண்டிருக்கும் குறுகலான பரப்பைக்கொண்ட ஒரு இயற்கையான மலைச்சிகர அமைப்பாகும்.
இது லோஹாகர் கோட்டைக்கு அருகில் உள்ளது. லோனாவலாவில் பிரசித்தமான சுற்றுலா அம்சமான இது பார்ப்பதற்கு அச்சமூட்டும் தோற்றத்தைக்கொண்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்களும், மலைஏறிகளும் விரும்பும் ஸ்தலமான இது விஸாபூர் கோட்டைக்கு அருகிலும் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து இந்த சிகரத்தின் மேலிருந்து சுற்றிலும் இயற்கைக்காட்சிகளை ரசிக்கும் அனுபவத்தினைப்பெறலாம்.